ETV Bharat / state

''மத்திய அரசு தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிடவேண்டும்'' - தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும்

சேலம்:மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி
author img

By

Published : Oct 5, 2019, 8:12 AM IST

சேலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சட்டபூர்வ நிர்வாகம், பொதுவிநியோகத் திட்டம், தொழிலாளர் நல சட்டங்கள் பாதுகாப்பு குறித்து அலுவலர்கள் சிறப்புரையாற்றினர். இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மத்திய அரசு பொது விநியோக திட்டத்தை சிதைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதை திரும்ப பெறவேண்டும். மாநில அளவில் சிறப்பாக செயல்படும் பொது விநியோக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்பதிலும், இரவு பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தொழிலாளர் நல சட்டங்கள் மூலம் போராடி பெற்ற உரிமைகளை பாதிக்கும் வகையில், மத்திய அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி

மேலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் அறிவித்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டும் இதே அளவுதான் வழங்கப்பட்டது.இந்த ஆண்டு கூடுதலாக விற்பனை நடந்துள்ள நிலையில், 20 விழுக்காடு போனஸ் என்பது போதாது என்றும், கூடுதலாக வழங்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி காவல் அலுவலர் சுட்டுக் கொலை!

சேலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சட்டபூர்வ நிர்வாகம், பொதுவிநியோகத் திட்டம், தொழிலாளர் நல சட்டங்கள் பாதுகாப்பு குறித்து அலுவலர்கள் சிறப்புரையாற்றினர். இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மத்திய அரசு பொது விநியோக திட்டத்தை சிதைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதை திரும்ப பெறவேண்டும். மாநில அளவில் சிறப்பாக செயல்படும் பொது விநியோக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்பதிலும், இரவு பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தொழிலாளர் நல சட்டங்கள் மூலம் போராடி பெற்ற உரிமைகளை பாதிக்கும் வகையில், மத்திய அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி

மேலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் அறிவித்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டும் இதே அளவுதான் வழங்கப்பட்டது.இந்த ஆண்டு கூடுதலாக விற்பனை நடந்துள்ள நிலையில், 20 விழுக்காடு போனஸ் என்பது போதாது என்றும், கூடுதலாக வழங்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி காவல் அலுவலர் சுட்டுக் கொலை!

Intro:மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் தமிழ் மாநில சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.


Body:சேலத்தில் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் சட்டபூர்வ நிர்வாகம் பொதுவிநியோகத் திட்டம் தொழிலாளர் நல சட்டங்கள் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் தமிழக அளவில் இருந்து ஏராளமான தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கின் முடிவில் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்," மத்திய அரசு பொது விநியோக திட்டத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதை வாபஸ் பெறவேண்டும் தமிழக அளவில் சிறப்பாக செயல்படும் பொது விநியோக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் .

சம வேலைக்கு சம ஊதியம் என்பதிலும் இரவு பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல தொழிலாளர் நல சட்டங்களை போராடிப் பெற்ற உரிமைகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .

மத்திய அரசு திரும்பப் பெற்று போராடிப் பெற்ற உரிமைகளை தொடர்ந்து தொழிலாளர்கள் நிலைநாட்டும் வகையில் செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


Conclusion:மேலும் அவர் கூறுகையில் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவித்துள்ளது ஆனால் சென்ற ஆண்டும் இதே அளவுதான் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு கூடுதலாக விற்பனை நடந்துள்ள நிலையில் 20% போனஸ் என்பது போதாது இதேபோல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நாட்களில் மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் போராட்டங்களை நடத்த உள்ளதாக கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.