ETV Bharat / state

மொபைல் செயலியில் முதன்முறையாக பொருளாதார கணக்கெடுப்பு...! - 7th economic sensex starts in salem

சேலம்: மத்திய அரசால் நடத்தப்படவுள்ள ஏழாவது பொருளாதர கணக்கெடுப்பு முதன்முறையாக மொபைல் செயலியில் நடத்தப்படவுள்ளதாகவும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் பொருளாதார கணக்கெடுப்பு அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

economic census
author img

By

Published : Sep 15, 2019, 10:04 AM IST

மத்திய அரசின் புள்ளியியல் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் மூலம் பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது போன்று பொருளாதார கணக்கெடுப்பும் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு நாடு தழுவிய அளவில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளவுள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்தப் பொருளாதார கணக்கெடுப்பு பணி சேலம் மாவட்டத்தில் மிக விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் மத்திய அரசின் பொதுச்சேவை மையங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்து 500 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொருளாதர கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

இந்தப் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று பொருளாதார கணக்கெடுப்பு எப்படி நடத்துவது என்று செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. புள்ளியியல் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பாளர்களுக்கு நேரடியாக விளக்கங்கள் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புள்ளியியல் துறை உதவி இயக்குநர் லோகநாதன் பேசுகையில், நாட்டிலேயே முதன்முறையாக நவீன முறையில் செல்ஃபோன் செயலி மூலம் இம்முறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் புள்ளியியல் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் மூலம் பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது போன்று பொருளாதார கணக்கெடுப்பும் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு நாடு தழுவிய அளவில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளவுள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்தப் பொருளாதார கணக்கெடுப்பு பணி சேலம் மாவட்டத்தில் மிக விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் மத்திய அரசின் பொதுச்சேவை மையங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்து 500 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொருளாதர கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

இந்தப் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று பொருளாதார கணக்கெடுப்பு எப்படி நடத்துவது என்று செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. புள்ளியியல் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பாளர்களுக்கு நேரடியாக விளக்கங்கள் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புள்ளியியல் துறை உதவி இயக்குநர் லோகநாதன் பேசுகையில், நாட்டிலேயே முதன்முறையாக நவீன முறையில் செல்ஃபோன் செயலி மூலம் இம்முறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Intro:மத்திய அரசால் நாடு தழுவிய அளவில் 7 வது பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது அதற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பை கொடுக்கவேண்டும் என்று பொருளாதார கணக்கெடுப்பு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Body:ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய செல்போன் செயலி வழியாக நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக சேலம் மாவட்டத்தில் இந்தப் பொருளாதார கணக்கெடுப்பு பணியானது மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்தப்ஷ பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது .

மத்திய அரசின் புள்ளியியல் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் மூலம் 5 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் படுவது போல பொருளாதார கணக்கெடுப்பும் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

இதில் மத்திய அரசின் பொது சேவை மையங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கெடுப்பாளர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த முறை நவீன முறையில் செல்போன் ஆப் மூலம் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப் படுவது குறிப்பிடத் தக்கது


Conclusion:பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று பொருளாதார கணக்கெடுப்பு எப்படி நடத்துவது என்று சேலம் மாவட்டத்தில் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 1500 பேருக்கு, செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது தொல்லியல் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பாளர்களுக்கு, நேரடியாக விளக்கங்கள் அளித்தனர்.

( லோகநாதன்
உதவி இயக்குநர், புள்ளியியல் துறை)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.