ETV Bharat / state

டாஸ்மாக்கில் தகராறு செய்து ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவரின் மண்டையை உடைத்த நபர்கள் கைது

author img

By

Published : Jun 15, 2021, 7:22 PM IST

ராமநாதபுரம்: பரமக்குடி மதுக்கடையில் தகராறு செய்து ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவரின் மண்டையை உடைத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

பரமக்குடி
பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தர்ம ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பாண்டியன், சூரியகுமார் (23), சந்துரு (20) ஆகிய மூன்று பேரும் ஆற்றுப்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்கள் வாங்க சென்றுள்ளனர்.

அப்போது தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி ஏற்கனவே மது வாங்குவதற்காக ஏராளமானோர் தகுந்த இடைவெளியுடன் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் அந்த மூன்று பேரும் வரிசையில் நிற்காமல் மது பாட்டில்களைக் கேட்டுள்ளனர்.

உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பொதுவக்குடி குழந்தைசாமி (22) என்பவர் அந்த மூவரிடமும் வரிசையில் நின்று வருமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூன்று பேரும் தாங்கள் வாங்கி வைத்திருந்த மது பாட்டில்களால் அவரது தலையில் அடித்துத் தாக்கினர்.

இதில் குழந்தைசாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சூரியகுமார், சந்துரு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள தினேஷ் பாண்டியனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தர்ம ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பாண்டியன், சூரியகுமார் (23), சந்துரு (20) ஆகிய மூன்று பேரும் ஆற்றுப்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்கள் வாங்க சென்றுள்ளனர்.

அப்போது தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி ஏற்கனவே மது வாங்குவதற்காக ஏராளமானோர் தகுந்த இடைவெளியுடன் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் அந்த மூன்று பேரும் வரிசையில் நிற்காமல் மது பாட்டில்களைக் கேட்டுள்ளனர்.

உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பொதுவக்குடி குழந்தைசாமி (22) என்பவர் அந்த மூவரிடமும் வரிசையில் நின்று வருமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூன்று பேரும் தாங்கள் வாங்கி வைத்திருந்த மது பாட்டில்களால் அவரது தலையில் அடித்துத் தாக்கினர்.

இதில் குழந்தைசாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சூரியகுமார், சந்துரு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள தினேஷ் பாண்டியனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.