ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் பகுதியில் உள்ள மூன்று முக்கு சாலை அருகே அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்கில், பெண் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு திரும்பினார்.
அப்போது சாலையைக் கடக்கையில் அவ்வழியாக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இதுகுறித்து தேவிப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.