ETV Bharat / state

கணவன் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது!

author img

By

Published : Dec 17, 2020, 8:43 PM IST

ராமநாதபுரம்: கணவர் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.

அம்பிகாவதி
அம்பிகாவதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஆனந்த பெருமாள், அம்பிகாவதி. ஆனந்த பெருமாள் நாள்தோறும் மது அருந்தி விட்டு, வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று (டிச.17) காலையிலும் ஆனந்த பெருமாள் அவரது மனைவியிடம் சண்டையிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அம்பிகாவதி, வீட்டின் அருகே இருந்த அம்மி கல்லை எடுத்து, ஆனந்த பெருமாள் தலையில் போட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த கமுதி காவல்துறையினர், இறந்தவரின் உடலை கைபற்றி உடற்கூராய்விற்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அம்பிகாவதி மீது வழக்குப் பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நில தகராறில் வனத்துறை காவலரை கத்தியால் குத்திய நபர் - போலீஸார் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஆனந்த பெருமாள், அம்பிகாவதி. ஆனந்த பெருமாள் நாள்தோறும் மது அருந்தி விட்டு, வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று (டிச.17) காலையிலும் ஆனந்த பெருமாள் அவரது மனைவியிடம் சண்டையிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அம்பிகாவதி, வீட்டின் அருகே இருந்த அம்மி கல்லை எடுத்து, ஆனந்த பெருமாள் தலையில் போட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த கமுதி காவல்துறையினர், இறந்தவரின் உடலை கைபற்றி உடற்கூராய்விற்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அம்பிகாவதி மீது வழக்குப் பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நில தகராறில் வனத்துறை காவலரை கத்தியால் குத்திய நபர் - போலீஸார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.