ETV Bharat / state

முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம் - அன்வர் ராஜா

author img

By

Published : Aug 23, 2020, 7:08 PM IST

Updated : Aug 23, 2020, 7:29 PM IST

ராமநாதபுரம்: முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தியே தேர்தல் களத்தை சந்திப்போம் என அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

anwar raja
anwar raja

அதிமுகவில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. இதுகுறித்து ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் குறித்து யாரும் பொதுவெளியில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும், மீறி தெரிவிப்போர் மீது உரிய நடவடிக்கை கட்சி சார்பாக எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி சற்று ஓய்ந்திருந்தது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.22) நடந்தது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் அதிமுகவில் மட்டுமல்ல திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளிலும் கூட கடந்த காலங்களில் இருந்தது.

இப்போதுதான் எழுந்த பிரச்னையாக இதைக் கருத வேண்டாம். முதலமைச்சர் வேட்பாளர் பற்றி பேசுவது ஒன்றும் புதிதல்ல, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளரை அறிவிக்காமலேயே வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார் அம்மா, தற்போது அதே நிலை நீடிக்காது. வரும் 2021 தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்தி அதிமுக தேர்தலை சந்திக்கும்” என்றார்.

கட்சியின் தலைமை கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அன்வர் ராஜாவின் இந்த கருத்து மீண்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இதையும் படிங்க:அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: தலைமை கூறுவதை ஏற்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

அதிமுகவில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. இதுகுறித்து ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் குறித்து யாரும் பொதுவெளியில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும், மீறி தெரிவிப்போர் மீது உரிய நடவடிக்கை கட்சி சார்பாக எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி சற்று ஓய்ந்திருந்தது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.22) நடந்தது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் அதிமுகவில் மட்டுமல்ல திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளிலும் கூட கடந்த காலங்களில் இருந்தது.

இப்போதுதான் எழுந்த பிரச்னையாக இதைக் கருத வேண்டாம். முதலமைச்சர் வேட்பாளர் பற்றி பேசுவது ஒன்றும் புதிதல்ல, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளரை அறிவிக்காமலேயே வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார் அம்மா, தற்போது அதே நிலை நீடிக்காது. வரும் 2021 தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்தி அதிமுக தேர்தலை சந்திக்கும்” என்றார்.

கட்சியின் தலைமை கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அன்வர் ராஜாவின் இந்த கருத்து மீண்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இதையும் படிங்க:அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: தலைமை கூறுவதை ஏற்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Last Updated : Aug 23, 2020, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.