மதுராந்தகம் அடுத்த செய்யூர் ஒன்றியம், செங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் தனக்குச் சொந்தமான நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் காளியிடம் விண்ணப்பிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, 'பட்டா மாற்றம் செய்ய 9 ஆயிரம் ரூபாய் வேண்டும்' என காளி லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜகோபால், லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரை அணுகிப் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!
தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரின் ஆலோசனைப் படி, ரசாயனம் தடவிய 9 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செங்காட்டுர் அலுவலகத்தில் வைத்து காளியிடம் கொடுத்துள்ளார்.
இதனிடையே, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புக் காவல் துறைக் காவல் கண்காணிப்பாளர் சிவபாதசேகரன், காவல் துறையினர் காளியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.