ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. இலங்கை நீதிமன்றம் கூறிய காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 5:38 PM IST

2 years jail sentence for Rameswaram fishermen: கடந்த மாதம் 14, 28 ஆம் தேதிகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வர மீனவர்களுள் ஒருவருக்கு மட்டும் 24 மாத சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவருக்கு 2 ஆண்டு சிறை
21 ராமேஸ்வரம் மீனவர்கள் விரைவில் விடுதலை

ராமநாதபுரம்: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததற்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 21 பேர் சிறைக்காவல் தேதி முடிந்து விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 24 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆம் தேதிகளில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நான்கு விசைப்படகுகளையும் அதிலிருந்து 22 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆய்வுக்கு சென்ற இடத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்.. வைரலாகும் வீடியோ!

இதனையடுத்து சிறையில் உள்ள மீனவர்களின் காவல் தேதி முடிந்த நிலையில், அவர்கள் இலங்கை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 22 மீனவர்களிடமும் விசாரணை நடத்திய நீதிபதி 21 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஒரு மீனவர் மட்டும் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 24 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இன்னும் ஒரு சில தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பண மோசடி, திருமணத்தை மீறிய உறவு; நெல்லை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கொலையில் நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி!

ராமநாதபுரம்: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததற்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 21 பேர் சிறைக்காவல் தேதி முடிந்து விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 24 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆம் தேதிகளில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நான்கு விசைப்படகுகளையும் அதிலிருந்து 22 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆய்வுக்கு சென்ற இடத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்.. வைரலாகும் வீடியோ!

இதனையடுத்து சிறையில் உள்ள மீனவர்களின் காவல் தேதி முடிந்த நிலையில், அவர்கள் இலங்கை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 22 மீனவர்களிடமும் விசாரணை நடத்திய நீதிபதி 21 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஒரு மீனவர் மட்டும் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 24 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இன்னும் ஒரு சில தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பண மோசடி, திருமணத்தை மீறிய உறவு; நெல்லை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கொலையில் நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.