ETV Bharat / state

ராமநாதபுரத்தில் இரண்டு நாட்களாக அதிகரிக்கும் கரோனா பாதிப்பு - Ramanathapuram corona cases status today

ராமநாதபுரம் : மூன்று பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் என்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : May 24, 2020, 3:48 PM IST

ராமநாதபுரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 16ஆக அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், எட்டு வயது சிறுமி உள்பட மூவருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55லிருந்து 58ஆக தற்போது உயர்ந்துள்ளது. இவர்களில் 29 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய 28 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க : பிரியாணி சாப்பிட ஆசை...! கரோனா வைத்தது பூசை...!

ராமநாதபுரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 16ஆக அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், எட்டு வயது சிறுமி உள்பட மூவருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55லிருந்து 58ஆக தற்போது உயர்ந்துள்ளது. இவர்களில் 29 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய 28 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க : பிரியாணி சாப்பிட ஆசை...! கரோனா வைத்தது பூசை...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.