ETV Bharat / state

பாம்பனில் கடக்கும் ’புரெவி’ - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

ராமநாதபுரம்: புரெவி புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு மற்றும் மீட்புப்பணிகள் குறித்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

author img

By

Published : Dec 3, 2020, 1:20 PM IST

burevi
burevi

இலங்கையின் திரிகோணமலையில் நேற்றிரவு கரையைக் கடந்த புரெவி புயல், தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே இன்று அல்லது நாளை கரையை கடக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், பாம்பன் பாலப் பகுதிகளில் வாகனங்களை மெதுவாக இயக்க போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், பாம்பன் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், மாநில பேரிடர் மீட்புக்குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், கண்காணிப்பு அதிகாரி டிபி யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாம்பனில் கடக்கும் ’புரெவி’ - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

பின்னர் பாம்பன் பாலம் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர். புயலால் ஏற்படும் தாக்கத்தை சமாளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பாம்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள எடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: புரெவி புயல்: தயார் நிலையில் மீட்புக் குழு!

இலங்கையின் திரிகோணமலையில் நேற்றிரவு கரையைக் கடந்த புரெவி புயல், தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே இன்று அல்லது நாளை கரையை கடக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், பாம்பன் பாலப் பகுதிகளில் வாகனங்களை மெதுவாக இயக்க போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், பாம்பன் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், மாநில பேரிடர் மீட்புக்குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், கண்காணிப்பு அதிகாரி டிபி யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாம்பனில் கடக்கும் ’புரெவி’ - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

பின்னர் பாம்பன் பாலம் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர். புயலால் ஏற்படும் தாக்கத்தை சமாளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பாம்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள எடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: புரெவி புயல்: தயார் நிலையில் மீட்புக் குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.