ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி அனுசியாபுரத்தைச் சேர்ந்தவர் கவியரசு. இவருக்கும் மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த சிட்டு ராணி என்பவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணமாகியுள்ளது.
சிட்டு ராணிக்கு கணவர் கவியரசு மீது விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்ந நிலையில் சிட்டு ராணி நேற்று (மே.11) காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பரமக்குடி வட்டார வருவாய் துறை அலுவலர் தங்கவேலு விசாரணை நடத்திவருகின்றார். திருமணமான ஒரே மாதத்தில் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து வெடித்த கேஸ் சிலிண்டர்கள்: தீயணைப்பு வீரர் உள்பட மூவர் காயம்!