ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள் - ஏர்வாடியில் நடந்த கொடூரம்!

ராமநாதபுரம்: ஏர்வாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏழு சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

author img

By

Published : Nov 6, 2019, 10:06 PM IST

ervadi

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், தர்காவிற்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் மனநல சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வாய்பேச முடியாத தன் தந்தையின் உதவியுடன் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அந்தப் பெண் ஏர்வாடி தர்காவின் அருகே உள்ள காட்டுப்பள்ளி என்ற பகுதியில் தங்கி மனநலம் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் நேற்று முன்தினம் நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக தந்தையின் உதவியுடன் சென்றபோது 14 முதல் 19 வரை வயது வரை உள்ள ஏழு சிறுவர்கள் அந்தப் பெண்ணை வழி மறித்து இழுத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்டபெண்ணின் தந்தை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஏழு சிறுவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் ஏர்வாடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏர்வாடி

பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஏழு சிறுவர்களும் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடூரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், தர்காவிற்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் மனநல சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வாய்பேச முடியாத தன் தந்தையின் உதவியுடன் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அந்தப் பெண் ஏர்வாடி தர்காவின் அருகே உள்ள காட்டுப்பள்ளி என்ற பகுதியில் தங்கி மனநலம் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் நேற்று முன்தினம் நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக தந்தையின் உதவியுடன் சென்றபோது 14 முதல் 19 வரை வயது வரை உள்ள ஏழு சிறுவர்கள் அந்தப் பெண்ணை வழி மறித்து இழுத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்டபெண்ணின் தந்தை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஏழு சிறுவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் ஏர்வாடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏர்வாடி

பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஏழு சிறுவர்களும் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடூரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது

Intro:
இராமநாதபுரம்
நவ.5

ஏர்வாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்டப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் 7 சிறுவர்களிடம் போலீசார் விசாரணைBody:இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், தர்காவிற்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் மனநல சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த 2 மாதத்திற்க்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வாய்பேச முடியாத தந்தையின் உதவியுடன் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். ஏர்வாடி தர்காவின் அருகே உள்ள காட்டுப்பள்ளி என்ற பகுதியில் தங்கி மனநலம் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்..இந்நிலையில் அந்த இளம் பெண் நேற்று முந்தினம் நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக அப்பாவின் உதவியுடம் செல்லும் போது 7 சிறுவர்கள் வழி மறித்து பெண்ணை இழுத்துச் சென்று மறைவான இடத்தி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்த செய்தி பரவ பாதிக்கப்பட்டப் பெண்ணின் தந்தை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்கிறார். அதனடிப்படையில் 7 சிறுவர்கள் மற்றும் உறவினர்களிடம் ஏர்வாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிக்கு நேர்ந்த இந்த சம்பவம் ஏர்வாட்டியில் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.