ETV Bharat / state

பெரிய கோயில் குடமுழுக்கினை தமிழில் நடத்த கொளத்தூர் மணி வலியுறுத்தல்

author img

By

Published : Jan 28, 2020, 10:06 AM IST

ராமநாதபுரம்: தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கினை தமிழில் நடத்தவேண்டும் என்றும் சமஸ்கிருதத்தில் நடத்த முனைவது தமிழரின் தன்மானத்தை அவமதிக்கின்ற செயல் என்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

periyarist  Kolathur Mani  திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி  தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு  குடமுழுக்கு தமிழில்
கொளத்தூர் மணி

பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் ராமநாதபுரத்தில் திருக்குறள் மாநாட்டை நடத்தினர். இதில், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்விற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பவர்களின் குரலாக இருக்கிறார்.

அவருக்கு யாரோ தவறான கருத்துகளைச் சொல்லி பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவதூறான கருத்தைப் பேசிய ரஜினியை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் பேசிய கருத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ் மன்னர்கள் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் திருக்குறள் மாநாடு

அதனை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தவிருக்கிறோம். தமிழ் அல்லாது சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த முனைவது தமிழரின் தன்மானத்தை, மொழி உணர்ச்சியை அவமதிக்கின்ற செயலாகும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்

பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் ராமநாதபுரத்தில் திருக்குறள் மாநாட்டை நடத்தினர். இதில், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்விற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பவர்களின் குரலாக இருக்கிறார்.

அவருக்கு யாரோ தவறான கருத்துகளைச் சொல்லி பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவதூறான கருத்தைப் பேசிய ரஜினியை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் பேசிய கருத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ் மன்னர்கள் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் திருக்குறள் மாநாடு

அதனை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தவிருக்கிறோம். தமிழ் அல்லாது சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த முனைவது தமிழரின் தன்மானத்தை, மொழி உணர்ச்சியை அவமதிக்கின்ற செயலாகும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்

Intro:தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் திராவிட விடுதலைக்கழகம் தலைவர் கொளத்தூர் மணி


Body:இராமநாதபுரத்தில் பெரியாரின் 141 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது துக்ளக் விழாவில் பேசிய ரஜினி தமிழகத்தில் காலூன்ற நினைப்பவர்களின் குரலாகவே இருந்ததாக குறிப்பிட்டார். இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டார். தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் ஒத்தக் கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து சென்னையில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் கூறினார். அதேபோல் கோவையில் அம்பேத்காரின் நினைவு நாள் பேரணி நீலச்சட்டை பேரணி, சாதி ஒழிப்பு மாநாடாக பிப்பிரவரி 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்.அனைத்து துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.