ETV Bharat / state

" ஜிடிபி வீழ்ச்சியால் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது" - கே.எஸ்.அழகிரி உருக்கம்

author img

By

Published : Sep 9, 2019, 12:04 AM IST

ராமநாதபுரம் : வேலைவாய்ப்பு இல்லாததால், இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் செட்டி ஊரணியை காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ் பாபு, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க அமைப்பின் சார்பில், தனது சொந்த ஏற்பாட்டில் தூர்வாரியுள்ளார். இந்த, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி

பின்பு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் வருத்தப்படக்கூடியது. இதன் மூலம் சுயேட்சையான பல அமைப்புகளில் உள்ளவர்கள், அதிகாரிகள் பதவியை ராஜினமா செய்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரபுகளுக்கு மாறாக மாற்றப்பட்டார். இதனால் அவர் ராஜினமா செய்துள்ளார் என கூறினார்.

மேலும், பாஜகவின் 100 நாள் ஆட்சியில் பரிதாபகரமாக பொருளாதாரம், நிதித்துறை, தொழில்துறை, வேலைவாய்ப்புத்துறை, உள்ளிட்ட துறைகள் சென்று கொண்டிருக்கின்றன. மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகியுள்ளன. நாட்டின் ஜிடிபி 9 சதவீதமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால், தற்போது அது 4 சதவீதமாக குறைந்துள்ளது.

வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கிச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. படித்த பல கோடி பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காததால் நமக்கு கிடைக்காது என இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதை நிறுத்தி வருகின்றனர். இது அனைத்தும் தேசத்தை நோக்கி இருக்கும் இடர்ப்பாடுகள் என கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் செட்டி ஊரணியை காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ் பாபு, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க அமைப்பின் சார்பில், தனது சொந்த ஏற்பாட்டில் தூர்வாரியுள்ளார். இந்த, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி

பின்பு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் வருத்தப்படக்கூடியது. இதன் மூலம் சுயேட்சையான பல அமைப்புகளில் உள்ளவர்கள், அதிகாரிகள் பதவியை ராஜினமா செய்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரபுகளுக்கு மாறாக மாற்றப்பட்டார். இதனால் அவர் ராஜினமா செய்துள்ளார் என கூறினார்.

மேலும், பாஜகவின் 100 நாள் ஆட்சியில் பரிதாபகரமாக பொருளாதாரம், நிதித்துறை, தொழில்துறை, வேலைவாய்ப்புத்துறை, உள்ளிட்ட துறைகள் சென்று கொண்டிருக்கின்றன. மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகியுள்ளன. நாட்டின் ஜிடிபி 9 சதவீதமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால், தற்போது அது 4 சதவீதமாக குறைந்துள்ளது.

வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கிச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. படித்த பல கோடி பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காததால் நமக்கு கிடைக்காது என இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதை நிறுத்தி வருகின்றனர். இது அனைத்தும் தேசத்தை நோக்கி இருக்கும் இடர்ப்பாடுகள் என கூறினார்.

Intro:இராமநாதபுரம்
செப்.8
வேலைவாய்ப்பின்மை இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி நகர்த்த வாய்ப்பு அதிக வாய்ப்பு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி.Body:ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் செட்டி ஊரணியை காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ் பாபு, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சார்பில் தனது சொந்த ஏற்பாட்டில் தூர்வாரியுள்ளார். இந்த ஊரணியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கவும், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் வருத்தப்படக்கூடியது. இதன் மூலம் சுயேட்சையான பல அமைப்புகளில் உள்ளவர்கள், அதிகாரிகள் பதவியை ராஜினமா செய்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரபுகளுக்கு மாறாக மாற்றப்பட்டார். அதனால் அவர் ராஜினமா செய்துள்ளார்.


பாஜகவின் 100 நாள் ஆட்சியில் பரிதாபகரமான தோல்வியில் பொருளாதாரம், நிதித்துறை, தொழில்துறை, வேலைவாய்ப்புத்துறை, உள்ளிட்ட துறைகள் சென்று கொண்டிருக்கின்றன. மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகியுள்ளன. நாட்டின் ஜிடிபி 9 சதவீதமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. தற்போது அது 4 சதவீதம் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கிச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது படித்த பல கோடி பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காததால் நமக்கு கிடைக்காது என இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதை நிறுத்தி வருகின்றனர். இது அனைத்தும் தேசத்தை நோக்கி இருக்கும் இடர்பாடுகள்" என கூறினார்.

சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தலித்துகள் குறித்த விமர்சனம் செய்யப்பட்டுள்ளது தவறானது. கல்வித்துறையிலும் ஆர்.எஸ்.எஸ்.,காரர்களின் தலையீடே இதற்கு காரணம் எனக்கூறினார்.

ஒரே நேரத்தில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு சென்றிருப்பதில் காரணம் இருக்கலாம். அவர் ஊரில் இல்லாதபோது, இவர்கள் எல்லாம் ஊரில் இருந்தால் தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காக அமைச்சர்களையும் அழைத்துச் சென்றிருக்கலாம். ப.சிதம்பரம் கைது ஜனநாயகத்துக்குவிடப்பட்ட சவால். ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸார் இரு பிரிவினராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.