ETV Bharat / state

சட்ட விரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்கள் கைது

author img

By

Published : Mar 10, 2021, 9:29 PM IST

சட்ட விரோதமாக அரிச்சல்முனை வந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு நபர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Indian Navy
Indian Navy

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியிலிருந்து ஆறு கடல் தொலைவிலுள்ள ஐந்தாம் மணல்திட்டு பகுதியில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தது.

அப்போது, எல்லை தாண்டி ஒரு பிளாஸ்டிக் பைபர் படகு வந்ததைப் பார்த்தனர். உடனே அந்தப் படகை பின் தொடர்ந்து சென்று பிடித்தனர். படகில் இலங்கையச் சேர்ந்த இருவர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள், இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குரூஸ் ரவீந்திரன், வெளிச்சோர் ரேகன் பாய்வா என்பது தெரியவந்து. பின் அவர்களை கைது செய்து அரிச்சல்முனை அழைத்து வந்து, ராமேஸ்வரம் கடற்படை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக இலங்கை பேசாளை கடற்கரையில் இருந்து இன்று (மார்ச் 10) காலை 6 மணிக்கு புறப்பட்டு வந்ததாகவும், திசை மாறி இந்திய கடல் பகுதிக்குள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். அவர்கள் வந்த படகில் சுமார் 5 கிலோ மீன்கள், 30 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை இருந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கண்ணுக்கு விருந்து: கடலில் விடப்பட்ட 130 சித்தாமை குஞ்சுகள்!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியிலிருந்து ஆறு கடல் தொலைவிலுள்ள ஐந்தாம் மணல்திட்டு பகுதியில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தது.

அப்போது, எல்லை தாண்டி ஒரு பிளாஸ்டிக் பைபர் படகு வந்ததைப் பார்த்தனர். உடனே அந்தப் படகை பின் தொடர்ந்து சென்று பிடித்தனர். படகில் இலங்கையச் சேர்ந்த இருவர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள், இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குரூஸ் ரவீந்திரன், வெளிச்சோர் ரேகன் பாய்வா என்பது தெரியவந்து. பின் அவர்களை கைது செய்து அரிச்சல்முனை அழைத்து வந்து, ராமேஸ்வரம் கடற்படை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக இலங்கை பேசாளை கடற்கரையில் இருந்து இன்று (மார்ச் 10) காலை 6 மணிக்கு புறப்பட்டு வந்ததாகவும், திசை மாறி இந்திய கடல் பகுதிக்குள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். அவர்கள் வந்த படகில் சுமார் 5 கிலோ மீன்கள், 30 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை இருந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கண்ணுக்கு விருந்து: கடலில் விடப்பட்ட 130 சித்தாமை குஞ்சுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.