ETV Bharat / state

பரமக்குடி, வீட்டின் கதவை உடைத்து கைவரிசை - வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

இராமநாதபுரம்: பரமக்குடி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

Gold theft
Gold theft at ramanathapuram
author img

By

Published : Feb 8, 2020, 12:42 PM IST

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள விளத்தூர் பெரியகுடியிருப்பைச் சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 56).

இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், கங்காதேவி, இந்துமதி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இவர் வெளிநாட்டில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் மலைச்சாமி காலை 9.30 மணிக்கு தனது குடும்பத்துடன் பரமக்குடியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர்.

பின்பு அவரது இரு மகள்களும் பிற்பகல் 1 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையினுள்ள பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 92 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

இதுபற்றி பரமக்குடியில் இருந்த தந்தை மலைச்சாமிக்கு மகள்கள் இருவரும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மலைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் எமனேசுவரம் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள விளத்தூர் பெரியகுடியிருப்பைச் சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 56).

இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், கங்காதேவி, இந்துமதி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இவர் வெளிநாட்டில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் மலைச்சாமி காலை 9.30 மணிக்கு தனது குடும்பத்துடன் பரமக்குடியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர்.

பின்பு அவரது இரு மகள்களும் பிற்பகல் 1 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையினுள்ள பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 92 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

இதுபற்றி பரமக்குடியில் இருந்த தந்தை மலைச்சாமிக்கு மகள்கள் இருவரும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மலைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் எமனேசுவரம் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!

Intro:இராமநாதபுரம்
பிப்.7
பரமக்குடி அருகே திருமணத்திற்கு சென்றவர் வீட்டின் கதவை உடைத்து 92 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்கள் கைவரிசை.Body:இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள விளத்தூர் பெரியகுடியிருப்பைச் சேர்ந்தவர் மலைச்சாமி(56).இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும்,கங்காதேவி,இந்துமதி என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர் வெளிநாட்டில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் மலைச்சாமி காலை 9.30 மணிக்கு தனது குடும்பத்துடன் பரமக்குடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர். பின்பு அவரது இரு மகள்களும் பிற்பகல் 1 மணிக்கு ஊருக்கு திரும்பி வந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.வீட்டின் கதவை திறந்து சென்ற இருவரும், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டும், அறையினுள் உள்ள பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 92 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்பு பரமக்குடியில் இருந்த தந்தை மலைச்சாமிக்கு மகள்கள் இருவரும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மலைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் எமனேசுவரம் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டதுடன், காவல்துறை மோப்ப நாய் ஜுலி வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.