ETV Bharat / state

தங்கக்கட்டி கடத்தலில் மோசடி செய்த நபர் சித்ரவதை: 5 பேரிடம் போலீசார் விசாரணை

author img

By

Published : Oct 2, 2020, 3:57 PM IST

ராமநாதபுரம்: தங்கக்கட்டி கடத்தலில் மோசடி செய்த நபரை கட்டி வைத்து சித்ரவதை செய்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கக் கட்டி கடத்தலில் மோசடி செய்த நபர் சித்தரவதை
தங்கக் கட்டி கடத்தலில் மோசடி செய்த நபர் சித்தரவதை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் மீனவர் ரகுமான். இவர் இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகளை கடத்தி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தனது நண்பர் சிவக்குமாருக்கு கொடுத்து வந்துள்ளார்.

செப்டம்பர் 26ஆம் தேதி ரகுமான், சிவக்குமாருக்கு 5 கிலோ தங்கக்கட்டியை கொடுத்துள்ளார். அதில் 2 கிலோ போலி தங்கம் இருந்ததால் கோபம் அடைந்த சிவக்குமார் ரகுமானை தேவிப்பட்டினம் அருகே பார்க்க வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு ரகுமான் தனது நண்பர்கள் ராவுத்தர்கனி, அயுஃப்கானுடன் சென்றுள்ளார். அப்போது காரில் நண்பர்களுடன் வந்த சிவக்குமார் மூன்று பேரையும் கடத்திச்சென்று, எலந்தைக்கூட்டம் அருகே உள்ள வீட்டில் கட்டி வைத்து சித்ரவதை செய்துவந்துள்ளனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதனிடையே ரகுமான் அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட சிவக்குமார், இஸ்மாயில் சபீர், முகமது அசாருதீன், யாசின், மருதுபாண்டி ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 74 சிலைகள் பறிமுதல்!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் மீனவர் ரகுமான். இவர் இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகளை கடத்தி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தனது நண்பர் சிவக்குமாருக்கு கொடுத்து வந்துள்ளார்.

செப்டம்பர் 26ஆம் தேதி ரகுமான், சிவக்குமாருக்கு 5 கிலோ தங்கக்கட்டியை கொடுத்துள்ளார். அதில் 2 கிலோ போலி தங்கம் இருந்ததால் கோபம் அடைந்த சிவக்குமார் ரகுமானை தேவிப்பட்டினம் அருகே பார்க்க வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு ரகுமான் தனது நண்பர்கள் ராவுத்தர்கனி, அயுஃப்கானுடன் சென்றுள்ளார். அப்போது காரில் நண்பர்களுடன் வந்த சிவக்குமார் மூன்று பேரையும் கடத்திச்சென்று, எலந்தைக்கூட்டம் அருகே உள்ள வீட்டில் கட்டி வைத்து சித்ரவதை செய்துவந்துள்ளனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதனிடையே ரகுமான் அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட சிவக்குமார், இஸ்மாயில் சபீர், முகமது அசாருதீன், யாசின், மருதுபாண்டி ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 74 சிலைகள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.