ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

author img

By

Published : Jul 24, 2019, 8:23 PM IST

ராமநாதபுரம்: கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால், பாம்பன் மீன்வர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அனுமதி மறுத்துள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்ல தடை

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று கூறி, மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாகவும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடந்த இரு நாட்களாக மீன்வளத்துறை மீனவர்களுக்குக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அனுமதிச் சீட்டு வழங்கவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் பாம்பன் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, மீனவர்கள் கூறும்போது, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்களைத் தடுப்பது, எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பும் எங்களுக்கும் தடை விதிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று கூறி, மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாகவும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடந்த இரு நாட்களாக மீன்வளத்துறை மீனவர்களுக்குக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அனுமதிச் சீட்டு வழங்கவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் பாம்பன் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, மீனவர்கள் கூறும்போது, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்களைத் தடுப்பது, எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பும் எங்களுக்கும் தடை விதிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Intro:இராமநாதபுரம்
ஜூலை. 24

கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் பாம்பன் மீன்வர்களுக்கு மீன்வளத்துறை அனுமதி வழங்கவில்லை.


Body:இராமநாதபுர மாவட்டம் பாம்பன் பகுதியில் சுமார் 100 மேற்ப்பட்ட விசைப்படகு மீன்வர்கள் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனர். சென்னை வானிலை ஆய்வு மையம் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீன்வர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறி இருந்தது. பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாகவும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த இரு நாட்களாக மீன்வளத்துறை மீனவர்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி சீட்டு வழங்கவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் பாம்பன் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த மீனவர்கள் கூறும் போது ஆழ்கடல் மீன்பிடிக்க செல்பவர்களை தடுப்பது எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பும் எங்களுக்கும் தடை விதிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.