ETV Bharat / state

11 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவு - fishermen released

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

fishermen-released
fishermen-released
author img

By

Published : Feb 11, 2020, 8:22 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குச் சென்ற சுவிட்டர், ரூம்ஸ், ராஜி, முத்து, இளையராஜா, செல்வம், விஸ்வா, வசீகரன், நாகரத்தினம், டேவிட், நாகேஸ்வரன் ஆகிய 11 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில், ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 11 மீனவர்கள் மீதும் புதிய சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இன்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி அந்தோணிப்பிள்ளை, ஜூட்சன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், 11 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், இவர்களின் விசைப்படகினை இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்படுகிறது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மழையால் செழித்த விவசாயம்' - மனம் நிறைந்த புதுக்கோட்டை விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குச் சென்ற சுவிட்டர், ரூம்ஸ், ராஜி, முத்து, இளையராஜா, செல்வம், விஸ்வா, வசீகரன், நாகரத்தினம், டேவிட், நாகேஸ்வரன் ஆகிய 11 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில், ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 11 மீனவர்கள் மீதும் புதிய சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இன்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி அந்தோணிப்பிள்ளை, ஜூட்சன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், 11 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், இவர்களின் விசைப்படகினை இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்படுகிறது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மழையால் செழித்த விவசாயம்' - மனம் நிறைந்த புதுக்கோட்டை விவசாயிகள்

Intro:இராமநாதபுரம்
பிப்.11

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு.Body:இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ந்தேதி இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து சுவிட்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற கடலுக்குச் சென்ற சுவிட்டர், ரூம்ஸ், ராஜி, முத்து, இளையராஜா, செல்வம், விஸ்வா, வசீகரன், நாகரத்தினம், டேவிட், நாகேஸ்வரன் ஆகிய 11 மீனவர்களை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்தனர்.11 மீனவர்கள் மீதும் இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையில் 11 மீனவர்களை விடுதலை செய்து உத்திரவிட்டார். மேலும் இவர்களின் விசைப்படகினை இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்படுகிறது என நீதிபதி தீர்பளித்தார்.தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.