ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழத்திற்கு வந்த பேராசிரியர்களால் பரபரப்பு!

author img

By

Published : Apr 16, 2021, 6:49 AM IST

ராமநாதபுரம்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியல் கல்லூரிக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க மடிக்கணினியுடன் வந்த பேராசிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Anna university College of Engineering  Anna University College of Engineering Ramanathapuram  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  Electronic voting machines  ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையம்  Ramanathapuram Vote Counting Center  Ramanathapuram District News  ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
Anna University College of Engineering Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவத்தினர், காவல் துறையினர் தலைமையில் 24 மணி நேர சுழற்சி முறை மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சுழற்சி முறையில் கண்காணித்துவருகின்றனர். இந்நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இணைய தளம் வாயிலாகப் பாடங்கள் நடத்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மடிக்கணினியுடன் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிக்கு வந்தனர்.

அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் அவர்களை எவ்வித விசாரணையின்றி கல்லூரி வளாகத்தில் செல்ல அனுமதித்தனர். இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் கண்காணிப்பிற்குச் செல்ல காலை அங்கு வந்த அரசியல் கட்சிகளின் முகவர்கள் விரிவுரையாளர்களை அனுமதித்தது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கல்லூரிக்கு வந்து உரிய விசாரணை செய்தார். தேர்தல் ஆணைய அலுவலர்கள், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி இணைய வகுப்புகளை மாற்றிடத்தில் நடத்த அறிவுறுத்தினார். இதனையடுத்து விரிவுரையாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழிகாட்டுதல் குழு நியமனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவத்தினர், காவல் துறையினர் தலைமையில் 24 மணி நேர சுழற்சி முறை மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சுழற்சி முறையில் கண்காணித்துவருகின்றனர். இந்நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இணைய தளம் வாயிலாகப் பாடங்கள் நடத்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மடிக்கணினியுடன் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிக்கு வந்தனர்.

அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் அவர்களை எவ்வித விசாரணையின்றி கல்லூரி வளாகத்தில் செல்ல அனுமதித்தனர். இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் கண்காணிப்பிற்குச் செல்ல காலை அங்கு வந்த அரசியல் கட்சிகளின் முகவர்கள் விரிவுரையாளர்களை அனுமதித்தது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கல்லூரிக்கு வந்து உரிய விசாரணை செய்தார். தேர்தல் ஆணைய அலுவலர்கள், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி இணைய வகுப்புகளை மாற்றிடத்தில் நடத்த அறிவுறுத்தினார். இதனையடுத்து விரிவுரையாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழிகாட்டுதல் குழு நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.