ராமநாதபுர மாவட்டம் முழுவதிலும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மினி கிளினிக் என கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் மாதம் முதல் இதுவரை ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.