ETV Bharat / state

மருந்துகடையில் நூதன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது! - புதுக்கோட்டை கொள்ளை வழக்கு

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே மருந்துகடையில் நூதன முறையில் திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இளைஞர்
author img

By

Published : Sep 28, 2019, 9:56 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் மருந்துகடை நடத்தி வருபவர் சம்பத்குமார் (55). இவரது மருந்துகடைக்கு வந்த நபர் ஒருவர் மருந்துகடைகளில் மாத்திரை வாங்கிவிட்டு சிறிது நேரம் கடையை நோட்டம் விட்டார். பின்பு கடையில் விளம்பர பதாகையில் இருந்த உரிமையாளரின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாதாக கூறப்படுகிறது.

அவர் சென்ற சிறிது நேரத்தில் மருந்துகடை உரிமையாளர் சம்பத்குமாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், உங்களது உறவினர் ஒருவர் மரிங்கிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும், அவர் உங்களது செல்போன் எண்ணை கொடுத்து தகவல் தெரிவிக்கும்படி கூறியதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து சம்பத்குமார் பதட்டத்தில் கடையை பூட்டாமல் மரிங்கிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு சென்று பார்த்தபோது யாரும் விபத்தில் சிக்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் கடைக்கு திரும்பி வந்து பார்த்த போது கல்லாபெட்டியில் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் சந்தேகபடும்படியாக சுற்றிதிரிந்த இளைஞரை சம்பத்குமார் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்(28) என்பதும், மருந்துக்கடையில் திருடியதும் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: சரக்கு வாகனங்களில் திருடிய 5 பேர் கைது - தனிப்படையினர் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் மருந்துகடை நடத்தி வருபவர் சம்பத்குமார் (55). இவரது மருந்துகடைக்கு வந்த நபர் ஒருவர் மருந்துகடைகளில் மாத்திரை வாங்கிவிட்டு சிறிது நேரம் கடையை நோட்டம் விட்டார். பின்பு கடையில் விளம்பர பதாகையில் இருந்த உரிமையாளரின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாதாக கூறப்படுகிறது.

அவர் சென்ற சிறிது நேரத்தில் மருந்துகடை உரிமையாளர் சம்பத்குமாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், உங்களது உறவினர் ஒருவர் மரிங்கிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும், அவர் உங்களது செல்போன் எண்ணை கொடுத்து தகவல் தெரிவிக்கும்படி கூறியதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து சம்பத்குமார் பதட்டத்தில் கடையை பூட்டாமல் மரிங்கிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு சென்று பார்த்தபோது யாரும் விபத்தில் சிக்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் கடைக்கு திரும்பி வந்து பார்த்த போது கல்லாபெட்டியில் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் சந்தேகபடும்படியாக சுற்றிதிரிந்த இளைஞரை சம்பத்குமார் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்(28) என்பதும், மருந்துக்கடையில் திருடியதும் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: சரக்கு வாகனங்களில் திருடிய 5 பேர் கைது - தனிப்படையினர் அதிரடி

Intro:Body:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருந்துகடையில் நூதன திருட்டுட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இவன் மீது ஏற்கனவே அன்னவாசல் மருந்துகடையில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கு உள்ளதாக தகவல்

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் மருந்துகடை நடத்தி வருபவர் சம்பத்குமார் (வயது-55) இவரது மருந்துகடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் மருந்துகடைகளில் மாத்திரை வாங்கிவிட்டு சிறிது நேரம் கடையை நோட்டம் விட்டுவிட்டு பின்பு கடையில் விளம்பர பதகையில் உள்ள உரிமையாளரின் செல்பேசி நெம்பரை எடுத்துகொண்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் மருந்துகடை உரிமையாளர் சம்பத் குமார் செல் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்பொழுது மறு முனையில் பேசிய மர்மநபர் உங்களது உறவினர் ஒருவர் மரிங்கிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் அவர் உங்களையும் உங்கள் செல்பேசி என்னையும் கொடுத்து உங்களை உடடியாக சம்பவ இடத்திற்கு வர சொல்கின்றார் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனையடுத்து உடனடியாக மருந்துகடையை பூட்டாமல் சம்பத்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அப்படி ஒரு சம்பவம் அங்கு நடக்கவில்லை.
பின்னர் திரும்பி கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த கல்லாவில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அருகில் நின்ற பெண்ணிடம் கேட்ட போது சிறிது நேரத்திற்கு முன்பு மருந்து வாங்கிய அதே நபர்தான் கடைக்குள் சென்று மீண்டும் வெளியே சென்றார் என்றார்.
அதன்பின்புதான் தான் ஏமாற்றப் பட்டதை சம்பத்குமார் அறிந்தார்.
இதுகுறித்து மருந்துகடை உரிமையாளர் சம்பத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் நூதன கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் சந்தேகம்படும்படியாக அந்த வாலிபர் சுற்றி திரிந்துள்ளார்.
இதனையடுத்து மெடிக்கல் உரிமையிளர் அவரை பிடித்து அன்னவாசல் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனாரி அருகே உள்ள குரூம்பளூர் உலகம்பட்டியை சக்திவேல் (வயது-28) என்பது தெரியவந்தது
மேலும் இவர் குடுமியான்மலை மருந்துகடையில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவர் மீது வழக்குபதிவு செய்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரமணி அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னவாசலில் உள்ள மருந்து கடையில் இதே நபர்தான் நூதன முறையில் கொள்ளையடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.