ETV Bharat / state

"சிதைந்து வரும் சித்தன்னவாசல்... பாதுக்காக்கப்படுமா?" - வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை - Archeology department should take action

புதுக்கோட்டை: சித்தன்னவாசல் ஓவியங்கள், குடைவரை கோயில்கள் ஆகியவை உலகப் புகழ்பெற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகும். தற்போது இந்த வரலாற்று தலம் சிதைந்து வருவது குறித்த சிறு தொகுப்பைக் காணலாம்.

சித்தன்னவாசல்
author img

By

Published : Aug 31, 2019, 9:56 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தின், மத்தியிலிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ளது சித்தன்னவாசல். இங்குள்ள ஓவியங்கள் அஜந்தா - எல்லோரா ஓவியங்களுக்கு நிகரானதாகும். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஓவியங்கள், சமணர்களால் மூலிகைச் செடிகளின் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டது. சமணர்கள் பல ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து இருந்தார்களாம். அவர்களின் இருப்பிடம் தற்போது சமணர் படுகை என்றும் அழைக்கப்படுகிறது.

சிதைந்து வரும் சித்தன்னாவசல்  retreat sithannavasal  Archeology department should take action வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை
சித்தன்னவாசல் ஓவியங்கள்

மேலும் இங்குள்ள சுனை லிங்கமும், தமிழ்த்தாய் சிலையும், பிராமியக் கல்வெட்டுகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும். இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவில் வரலாற்றில் இடம் பிடித்த இந்த சித்தன்னவாசலில் உள்ள அனைத்து ஓவியங்களும் கல்வெட்டுக்களும் களையிழந்து வருகின்றன.

சிதைந்து வரும் சித்தன்னாவசல்  retreat sithannavasal  Archeology department should take action வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை
சித்தன்னவாசல்

சித்தன்னவாசல் மலைப்பகுதியின் அடிவாரத்தில் பூங்காக்கள், படகு சவாரி தளம், நடனமாடும் தண்ணீர் எனச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதைக் கழிக்க நிறைய அம்சங்கள் இங்குச் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலில் மரங்கள், செடிகள் என அனைத்துமே முற்றிலும் சேதமாகிப் போனது. ஆனால் இதுவரையிலும் அப்பகுதியைச் சீரமைக்க எந்தவித நடவடிக்கையையும் தொல்லியல் துறை எடுக்கவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

சிதைந்து வரும் சித்தன்னவாசல்... பாதுக்காக்கப்படுமா?

இதுகுறித்து வரலாற்று இடங்களை ஆய்வு செய்யும் இயக்கமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அமைப்பைச் சேர்ந்த எடிசனிடம் கேட்டபோது, "சித்தன்னவாசலில் சிறப்புக் கணக்கற்றது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதன் சிறப்புகள் என்னவென்றே தெரியவில்லை. வெறும் சுற்றுலாத் தலமாக மட்டும் தான் பார்க்கிறார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் என்று கருதிப் பார்த்தால் தான், இதன் சிறப்பு மேலோங்கி நிற்கும். அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமை. சித்தன்னவாசல் பற்றிய புகார்களை தொல்லியல் துறையிடம் நாங்கள் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின், மத்தியிலிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ளது சித்தன்னவாசல். இங்குள்ள ஓவியங்கள் அஜந்தா - எல்லோரா ஓவியங்களுக்கு நிகரானதாகும். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஓவியங்கள், சமணர்களால் மூலிகைச் செடிகளின் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டது. சமணர்கள் பல ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து இருந்தார்களாம். அவர்களின் இருப்பிடம் தற்போது சமணர் படுகை என்றும் அழைக்கப்படுகிறது.

சிதைந்து வரும் சித்தன்னாவசல்  retreat sithannavasal  Archeology department should take action வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை
சித்தன்னவாசல் ஓவியங்கள்

மேலும் இங்குள்ள சுனை லிங்கமும், தமிழ்த்தாய் சிலையும், பிராமியக் கல்வெட்டுகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும். இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவில் வரலாற்றில் இடம் பிடித்த இந்த சித்தன்னவாசலில் உள்ள அனைத்து ஓவியங்களும் கல்வெட்டுக்களும் களையிழந்து வருகின்றன.

சிதைந்து வரும் சித்தன்னாவசல்  retreat sithannavasal  Archeology department should take action வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை
சித்தன்னவாசல்

சித்தன்னவாசல் மலைப்பகுதியின் அடிவாரத்தில் பூங்காக்கள், படகு சவாரி தளம், நடனமாடும் தண்ணீர் எனச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதைக் கழிக்க நிறைய அம்சங்கள் இங்குச் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலில் மரங்கள், செடிகள் என அனைத்துமே முற்றிலும் சேதமாகிப் போனது. ஆனால் இதுவரையிலும் அப்பகுதியைச் சீரமைக்க எந்தவித நடவடிக்கையையும் தொல்லியல் துறை எடுக்கவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

சிதைந்து வரும் சித்தன்னவாசல்... பாதுக்காக்கப்படுமா?

இதுகுறித்து வரலாற்று இடங்களை ஆய்வு செய்யும் இயக்கமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அமைப்பைச் சேர்ந்த எடிசனிடம் கேட்டபோது, "சித்தன்னவாசலில் சிறப்புக் கணக்கற்றது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதன் சிறப்புகள் என்னவென்றே தெரியவில்லை. வெறும் சுற்றுலாத் தலமாக மட்டும் தான் பார்க்கிறார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் என்று கருதிப் பார்த்தால் தான், இதன் சிறப்பு மேலோங்கி நிற்கும். அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமை. சித்தன்னவாசல் பற்றிய புகார்களை தொல்லியல் துறையிடம் நாங்கள் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Intro:சிதைந்து வரும் சித்தன்னாவாசல்..
பாதுகாக்கப்படுமா?Body:உலகப் புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளமான புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் ஓவியங்கள் குடைவரை கோவில்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்தியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவு உள்ளது சித்தன்னவாசல் இங்குள்ள ஓவியங்கள் அஜந்தா எல்லோரா ஓவியங்களுக்கு நிகராகும் இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட இந்த ஓவியங்கள் சமணர்களால் மூலிகைச் செடிகளில் வண்ணங்களை கொண்டு வரையப்பட்டது. சமணர்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க மலையின் உச்சியில் பாறையைக் குடைந்து அங்கு ஒளிந்து பல ஆண்டுகளாக வாழ்ந்து இருந்தார்களாம் அதை சமணர் படுகை என்று தற்போது அழைக்கப்படுகிறது. மேலும் இங்குள்ள சுனை லிங்கமும் ,தமிழ்தாய் சிலையும் , பிராமியக் கல்வெட்டுகளும் தனிச்சிறப்பு .இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் வரலாற்றில் இடம் பிடித்த இந்த சித்தன்னவாசலில் உள்ள அனைத்து ஓவியங்களும் கல்வெட்டுக்களும் களையிழந்து வருகிறது. சித்தன்னவாசல் மலைப்பகுதியின் அடிவாரத்தில் பூங்காக்கள், படகு சவாரி, நடனமாடும் தண்ணீர், என சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கு எண்ணற்ற அம்சங்களும் வைத்துள்ளனர் ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலில் மரங்கள் செடிகள் என அனைத்துமே முற்றிலும் சேதமாகின ஆனால் இதுவரையிலும் அப்பகுதியை சீரமைக்க எந்தவித நடவடிக்கையையும் தொல்லியல் துறை எடுக்கவில்லை.

இதுகுறித்து வரலாற்று இடங்களை ஆய்வு செய்யும் இயக்கமான யாதும் ஊரே யாவரும் கேளிர் அமைப்பினர் எடிசன் என்பவரிடம் கேட்டபோது,

சித்தன்னவாசலில் சிறப்பு கணக்கற்ற உலகப் புகழ்பெற்ற இந்த ஸ்தலத்தை ஆன்மிக ஸ்தலமாக அறிவிக்கவேண்டும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இதன் சிறப்புகள் என்னவென்றே தெரியவில்லை வெறும் சுற்றுலா தளமாக மட்டும்தான் பார்க்கிறார்கள் வரலாற்று சிறப்புமிக்க இடம் என்று கருதி பார்த்தால் தான் இதன் சிறப்பு மேலோங்கி நிற்கும் அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமை சித்தன்னவாசல் பற்றிய புகார்களை தொல்லியல் துறையிடம் நாங்கள் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை விரைவில் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் சித்தனவாசல் பற்றி விளக்கும் விதமாக கண்காட்சி ஒன்றை அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.