ETV Bharat / state

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் - புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - 5, 8ஆம் வகுப்பு பொது தேர்வு செய்திகள்

புதுக்கோட்டை: மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்ட ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான  பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள்  போராட்டம் நடத்திவருகின்றனர்.

5th 8th public exam
author img

By

Published : Sep 18, 2019, 2:54 PM IST

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று, அமைச்சர் செங்கோட்டையன் இத்தேர்வு முறையில் தமிழ்நாட்டிற்கு மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இது குறித்து அவர்கள் கூறுகையில், "மூன்று ஆண்டு விலக்கு அளித்திருப்பது நிரந்தரமானது அல்ல. இதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எப்போது வேண்டுமானாலும் புதிய கல்விக் கொள்கையில் இதனை கொண்டுவருவார்கள்" எனத் தெரிவித்தனர். எனவே இந்தப் பொதுத்தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்து போராடிவருகின்றனர்.

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று, அமைச்சர் செங்கோட்டையன் இத்தேர்வு முறையில் தமிழ்நாட்டிற்கு மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இது குறித்து அவர்கள் கூறுகையில், "மூன்று ஆண்டு விலக்கு அளித்திருப்பது நிரந்தரமானது அல்ல. இதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எப்போது வேண்டுமானாலும் புதிய கல்விக் கொள்கையில் இதனை கொண்டுவருவார்கள்" எனத் தெரிவித்தனர். எனவே இந்தப் பொதுத்தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்து போராடிவருகின்றனர்.

இதையும் பார்க்க

'5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு கோரப்பட்டுள்ளது'

5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - மாணவர்கள் கண்டன உள்ளிருப்புப் போராட்டம்!

Intro:ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டித்து கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம்..


Body:ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வை அறிவித்தபடி தற்போது மூன்று ஆண்டுகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் நேற்று அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் இந்த புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர் அதேபோல் இன்று மூன்றாம் விதி விலக்கு என்பது நிரந்தரமல்ல இந்த புதிய கல்விக் கொள்கை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.

இது குறித்து மாணவர்கள் தெரிவித்ததாவது,

மூன்று ஆண்டுகளுக்கு விதிவிலக்கு என்று தற்போது கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் புதிய கல்விக் கொள்கையை மாற்றுவார்கள் அதனால் நிரந்தரமாக இந்த கொள்கையை அரசு கைவிட வேண்டும் இதுபோன்ற புதிய கல்விக் கொள்கைகள் மாணவர்களின் வாழ்க்கையை சிதைத்து கல்வியை வெறுக்கும் வண்ணம் மாறி விடும்.
தற்போது தமிழ்நாட்டில் ஒவ்வொன்றையும் போராடிப் போராடித்தான் பெற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது அதனால் இந்த புதிய கல்விக் கொள்கை தொடர் போராட்டங்களை நடத்தி நிச்சயம் வெற்றி கொள்வோம் என்று தெரிவித்தனர்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.