ETV Bharat / state

வேகத்தடை அமைத்ததால் இரு சமூகத்தினரிடையே மோதல் - 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை

author img

By

Published : May 23, 2020, 11:56 AM IST

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே சாலையில் வேகத்தடை அமைத்ததால் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக படுகாயமடைந்த மூவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு சமூகத்தினரிடையே மோதல்
இரு சமூகத்தினரிடையே மோதல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கன்னியான் கொல்லை பகுதியில் ஒரு சமூகத்தினர் சாலையில் வேகத்தடை அமைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகேயுள்ள வானக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் அந்த வேகத்தடையை உடைத்துள்ளனர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் இரு தரப்பினரும் கம்பு, கட்டையால் கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.

இரு சமூகத்தினரிடையே மோதல்

இதில் படுகாயமடைந்த மூவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது வடகாடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சண்டையை விலக்க சென்றவருக்கு அரிவாள் வெட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கன்னியான் கொல்லை பகுதியில் ஒரு சமூகத்தினர் சாலையில் வேகத்தடை அமைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகேயுள்ள வானக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் அந்த வேகத்தடையை உடைத்துள்ளனர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் இரு தரப்பினரும் கம்பு, கட்டையால் கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.

இரு சமூகத்தினரிடையே மோதல்

இதில் படுகாயமடைந்த மூவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது வடகாடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சண்டையை விலக்க சென்றவருக்கு அரிவாள் வெட்டு!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.