கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
இருப்பினும் பொழுதுபோகவில்லை என இளைஞர்கள் ஆங்காங்கே கேரம் , கிரிக்கெட், ஃபுட் பால் விளையாடுவது என வெளியில் சுற்றிவருகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது என்பதை அறிந்த புதுக்கோட்டை காவலர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் கும்பலாக படுத்துறங்கிய இளைஞர்கள், கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள், கேரம் விளையாடி இளைஞர்கள் என அனைவரும் கேமரா பறந்து வருவதைக் கண்டு தலைதெறிக்க ஓடினர்.
இதையும் படிங்க: ட்ரோன் மூலம் கண்காணித்த போலீஸ் - அலறி அடித்து ஓடிய இளைஞர்கள்!
மேலும் இதுபோல கும்பல் கும்பலாக விளையாடுவது, சுற்றித்திரிவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இந்த வீடியோவை புதுக்கோட்டை காவல் துறை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, எமன் வந்து உயிர்களைக் கொல்ல ஆள்களை தேடுவதுபோல விழிப்புணர்வு வீடியோவையும் புதுக்கோட்டை காவல் துறை வெளியிட்டுள்ளனர்.
இந்த இரண்டு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: ட்ரோன் மூலம் கண்காணித்த காவல் துறை - சிதறியோடிய இளைஞர்கள்