ETV Bharat / state

புதுக்கோட்டை மாத்தூரில் ரசாயன கழிவுகளைக் கொட்டவந்த லாரி சிறைப்பிடிப்பு - மருத்துவக் கழிவு லாரி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாத்தூரில் ரசாயன கழிவுகளைக் கொட்டவந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

Pudukkottai, Chemical truck in the grip of the villagers
Pudukkottai, Chemical truck in the grip of the villagers
author img

By

Published : Jan 6, 2020, 7:10 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் விவேகானந்தா நகர் பகுதியில் ராமதாஸ் என்பவர் ஆறு ஏக்கர் பரப்பளவில் குட்டைகள் அமைத்து அதில் மீன் பண்ணை அமைத்துள்ளார்.

அந்த இடம், அதனைச் சுற்றி 10 ஏக்கர் பரப்பளவிலான அரசு நத்தம் வாரி புறம்போக்கு இடங்களில் கடந்த சில மாதங்களாக தனியார் ஆலைகளுக்குச் சொந்தமான குப்பை, ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றங்களாலும் தொற்றுநோய்களாலும் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதேபோல் ரசாயன கழிவுகளைக் கொட்ட முயன்றதாக இரு லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாத்தூரில் ரசாயன கழிவுகளைக் கொட்டவந்த லாரி சிறைப்பிடிப்பு

தகவலறிந்த மந்திர் காவல் ஆய்வாளர் பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல் குளத்தூர் வட்டாட்சியர் பழனிசாமி, மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அந்த லாரிகளைப் பறிமுதல்செய்து மாத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

லாரிகளின் ஓட்டுநர்கள் தப்பியோடிவிட்டனர். மேலும் நிலத்தின் உரிமையாளர் ராமதாஸ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தேனியில் கொட்டப்படும் கேரள கழிவுகளைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் விவேகானந்தா நகர் பகுதியில் ராமதாஸ் என்பவர் ஆறு ஏக்கர் பரப்பளவில் குட்டைகள் அமைத்து அதில் மீன் பண்ணை அமைத்துள்ளார்.

அந்த இடம், அதனைச் சுற்றி 10 ஏக்கர் பரப்பளவிலான அரசு நத்தம் வாரி புறம்போக்கு இடங்களில் கடந்த சில மாதங்களாக தனியார் ஆலைகளுக்குச் சொந்தமான குப்பை, ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றங்களாலும் தொற்றுநோய்களாலும் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதேபோல் ரசாயன கழிவுகளைக் கொட்ட முயன்றதாக இரு லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாத்தூரில் ரசாயன கழிவுகளைக் கொட்டவந்த லாரி சிறைப்பிடிப்பு

தகவலறிந்த மந்திர் காவல் ஆய்வாளர் பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல் குளத்தூர் வட்டாட்சியர் பழனிசாமி, மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அந்த லாரிகளைப் பறிமுதல்செய்து மாத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

லாரிகளின் ஓட்டுநர்கள் தப்பியோடிவிட்டனர். மேலும் நிலத்தின் உரிமையாளர் ராமதாஸ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தேனியில் கொட்டப்படும் கேரள கழிவுகளைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

Intro:Body:மாத்தூர் விவேகானந்தா நகரில் தொடர்ந்து கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொது மக்கள் சிறைபிடிப்பு.குளத்தூர் தாசில்தார் நேரில் ஆய்வு.


புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்ட விவாகரத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்த அதிகாரிகள் அந்த இடத்தின் பாதிப்பு தன்மை குறித்து அறிய சுகாதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் விவேகானந்தா நகர் பகுதியில் ராமதாஸ் என்பவர் 6 ஏக்கர் பரப்பளவில் குட்டைகள் அமைத்து அதில் மீன் பண்ணை அமைத்துள்ளார்.அந்த இடம் மற்றும் அதனை சுற்றி 10 ஏக்கர் பரப்பளவிலான அரசு நத்தம் வாரி புறம்போக்கு இடங்களில் கடந்த சில மாதங்களாக தனியார் ஆலைகளுக்கு சொந்தமான குப்பை மற்றும் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் களாலும் தொற்று நோய்களாலும் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதேபோல் ரசாயன கழிவுகளை கொட்ட முயன்றதாக இரு லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மந்திர் காவல் ஆய்வாளர் பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதேபோல் குளத்தூர் தாசில்தார் பழனிசாமி மற்றும் மாத்தூர் வீ.ஏ.ஓ மாதேஸ்வரன் உள்ளிட்ட வருவாய் துறையினர் அந்த லாரிகளை பறிமுதல் செய்து மாத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனிடையே அந்த லாரிகளின் ஓட்டுனர்கள் தப்பி ஓடிய நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குப்பை கழிவுகளை கொட்டியதாக இடத்தின் உரிமையாளர் ராமதாஸ் மீது மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியின் உத்தரவின்பேரில் அந்த பகுதியில் இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் இடம் தவிர அதனை சுற்றிய 10 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலங்களில் 10 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டு அதிலிருந்த மண்கள் திருடப்பட்டுள்ளதும், அதற்குப் பதிலாக குப்பை கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுகள் கொட்டி அந்த பள்ளங்கள் மூடப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி தொடர்ந்து கொட்டப்பட்ட ரசாயன கழிவுகளால் அந்தப் பகுதியின் மண்வளம் பாதிக்கப்பட்டு மண் நிறம் மாறி காணப்படுவதாகவும் அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த இடத்தின் தற்போதைய மண் தன்மை குறித்து ஆய்வு செய்யவும் அங்கு கொட்டப்பட்ட ரசாயன குப்பைகளால் பொது மக்களுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய சுகாதாரத்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளவும், அதேபோல் அந்த கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சோதனை மேற்கொள்ளவும், அந்தந்த துறைகளுக்கு கடிதம் அனுப்பும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறைகளில் அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் குப்பை கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுகளை சட்டவிரோதமாக மண்ணில் புதைத்து வந்த நிலத்தின் உரிமையாளர் ராமதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.