ETV Bharat / state

'பட்டொளி வீசி பறக்குது பாரீர்'- சுதந்திர தினக் கொண்டாட்டம்!

author img

By

Published : Aug 15, 2020, 10:44 PM IST

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர்கள், தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

independence day celebration  சுதந்திர தின கொண்டாட்டம்  மாவட்ட ஆட்சியர் பிரபாகர்  மாவட்ட ஆட்சியர் சிவராசு  கொடியேற்றும் நிகழ்வு
'பட்டொளி வீசிப் பறக்குது பாரீர்'- சுதந்திர தினக் கொண்டாட்டம்!

நாடு முழுவதும் 74ஆவது சுதந்திர தின விழா கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், எளிமையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

அந்தந்த மாவட்டங்களில் காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள், கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அலுவலர்கள், காவல் துறை, மருத்துவம், ஊரகத் துறை, பொது சுகாதாரம், நோய் தடுப்புத் துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்தோருக்கு நற்சான்றிதழும் பதக்கமும் வழங்கினர்.

பெரம்பலூர்


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கொடியேற்றி வைத்து சமாதானா புறாக்களை பறக்கவிட்டார்.

திருச்சி

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோல் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் சிவசுப்பிரமணியன், கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, 16 லட்சத்து 96 ஆயிரத்து 605 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை 7 பயனாளிகளுக்கு வழங்கினார்.

நாகப்பட்டினம்

நாகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் 85 பயனாளிகளுக்கு ரூபாய் 95 லட்சத்து 85 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சுதந்திர தின கொண்டாட்டம்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா தேசியக்கொடி ஏற்றிவைத்தார். துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.

தென்காசி


தென்காசி மாவட்டம் உதயமாகி கொண்டாடப்படும் முதல் சுதந்திர தின நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: தான் பயின்ற பள்ளியில் கொடி ஏற்றிய பூரண சுந்தரி ஐஏஎஸ்!

நாடு முழுவதும் 74ஆவது சுதந்திர தின விழா கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், எளிமையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

அந்தந்த மாவட்டங்களில் காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள், கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அலுவலர்கள், காவல் துறை, மருத்துவம், ஊரகத் துறை, பொது சுகாதாரம், நோய் தடுப்புத் துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்தோருக்கு நற்சான்றிதழும் பதக்கமும் வழங்கினர்.

பெரம்பலூர்


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கொடியேற்றி வைத்து சமாதானா புறாக்களை பறக்கவிட்டார்.

திருச்சி

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோல் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் சிவசுப்பிரமணியன், கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, 16 லட்சத்து 96 ஆயிரத்து 605 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை 7 பயனாளிகளுக்கு வழங்கினார்.

நாகப்பட்டினம்

நாகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் 85 பயனாளிகளுக்கு ரூபாய் 95 லட்சத்து 85 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சுதந்திர தின கொண்டாட்டம்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா தேசியக்கொடி ஏற்றிவைத்தார். துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.

தென்காசி


தென்காசி மாவட்டம் உதயமாகி கொண்டாடப்படும் முதல் சுதந்திர தின நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: தான் பயின்ற பள்ளியில் கொடி ஏற்றிய பூரண சுந்தரி ஐஏஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.