ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்த ஆடுகள் - போராடி மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

author img

By

Published : Dec 26, 2022, 10:42 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த 3 ஆடுகளை கொட்டும் மழையில் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்ட நிகழ்வு அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

கிணற்றில் தவறி விழுந்த ஆடுகள்; தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
கிணற்றில் தவறி விழுந்த ஆடுகள்; தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
கிணற்றில் தவறி விழுந்த ஆடுகள்; தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கினிசா. இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவருக்குச் சொந்தமான ஆடுகளை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கே மேய்ந்துக்கொண்டிருந்த ஆடுகள் மூன்றும் அருகே இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதைப் பார்த்த பாக்கினிசா அக்கம்பக்கத்தினரை அழைத்து கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை மீட்க முயற்சி செய்தார். இருப்பினும் முடியவில்லை.

பின்னர் இது குறித்து தகவலறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது, மழையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் 3 ஆடுகளையும் ஆட்டின் உரிமையாளர் பாக்கினிசாவிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் ஆடுகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பேட்டரி வாகனங்களால் ஆண்டுக்கு 3,000 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு தவிர்ப்பு - சென்னை மாநகராட்சி!

கிணற்றில் தவறி விழுந்த ஆடுகள்; தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கினிசா. இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவருக்குச் சொந்தமான ஆடுகளை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கே மேய்ந்துக்கொண்டிருந்த ஆடுகள் மூன்றும் அருகே இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதைப் பார்த்த பாக்கினிசா அக்கம்பக்கத்தினரை அழைத்து கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை மீட்க முயற்சி செய்தார். இருப்பினும் முடியவில்லை.

பின்னர் இது குறித்து தகவலறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது, மழையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் 3 ஆடுகளையும் ஆட்டின் உரிமையாளர் பாக்கினிசாவிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் ஆடுகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பேட்டரி வாகனங்களால் ஆண்டுக்கு 3,000 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு தவிர்ப்பு - சென்னை மாநகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.