புதுக்கோட்டை: விராலிமலை ஐயப்பா நகரைச் சேர்ந்தவர் நடனக் கலைஞர் மணிகண்டன். இவரது வீட்டிற்குள் இன்று (நவ.09) பாம்பு ஒன்று நுழைந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து இலுப்பூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், அரை மணிநேரம் போராடி வீட்டில் இருந்த பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.
உயிருடன் பிடிபட்ட அந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக, சாக்குப்பைக்குள் எடுத்துச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். இதனைத்தொடர்ந்து மணிகண்டன் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையும் படிங்க: மைத்ரி பாக் பூங்காவில் பிறந்து 2 மாதங்களான வெள்ளைப் புலிக்குட்டி விடுவிப்பு!