ETV Bharat / state

நெற்பயிர்களில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் வேதனை - farmers worried about damaged paddy

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் விவசாயப் பயிர்களில் அதிகரித்துள்ள நோய்த் தாக்குதலால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நெற்பயிர்களில் நோய்த் தாக்குதல், ஆனைக்கொம்பன் நோய்த் தாக்குதல், damaged paddy
நெற்பயிர்களில் நோய்த் தாக்குதல்
author img

By

Published : Jan 21, 2020, 11:58 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக முறையாகப் பருவமழை பெய்யாததால் விவசாயம் பொய்த்துப்போனது. இந்நிலையில் இந்தாண்டு பெய்த பருவமழையால் இங்கு நெல் உள்ளிட்டவைகளின் விவசாயம் செய்யப்பட்டது.

இதனிடையே இந்த விவசாயப் பயிர்களை ஆனைக்கொம்பன், புகையான், குலைநோய், எடைபழம் என்னும் மஞ்சள்புஞ்சை எனப் பல்வேறு நோய்கள் தாக்கியுள்ளன.

நெற்பயிர்களில் நோய்த் தாக்குதல்

இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனைதெரிவிக்கின்றனர். மேலும், பயிர்களின் பாதிப்புநிலை குறித்து வேளாண் துறை அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் பார்வையிட்டு அரசிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக முறையாகப் பருவமழை பெய்யாததால் விவசாயம் பொய்த்துப்போனது. இந்நிலையில் இந்தாண்டு பெய்த பருவமழையால் இங்கு நெல் உள்ளிட்டவைகளின் விவசாயம் செய்யப்பட்டது.

இதனிடையே இந்த விவசாயப் பயிர்களை ஆனைக்கொம்பன், புகையான், குலைநோய், எடைபழம் என்னும் மஞ்சள்புஞ்சை எனப் பல்வேறு நோய்கள் தாக்கியுள்ளன.

நெற்பயிர்களில் நோய்த் தாக்குதல்

இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனைதெரிவிக்கின்றனர். மேலும், பயிர்களின் பாதிப்புநிலை குறித்து வேளாண் துறை அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் பார்வையிட்டு அரசிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.

Intro:Body:விளைந்தும் பயன் இல்லாமல் போன நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் விவசாயம் செய்தும் பலனில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெருமருதூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சரியான பருவமழை பெய்யாததால் விவசாயம் பொய்த்து போனது.
இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த பருவமழையினால் விவசாயம் செய்து இருந்தனர்.
விவசாயம் செய்தும் பலனில்லாமல்
ஆனைகொம்பன்நோய்,
புகையான்,குலைநோய், எடைபழம் எனும் மஞ்சள்புஞ்சை என பல்வேறு நோய்கள் பயிர்களை தாக்கியுள்ளன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,

எங்கள்பகுதியில் சில ஆண்டுகளுக்குபின் இந்த ஆண்டுதான் நல்லபடியாக விவசாயம் விளைந்துள்ளது.
விளைந்தும் பலனில்லை நாங்கள் கடன்கள் வாங்கி விவசாயம் செய்துள்ளோம் பலவிதமான நோய்கள் பயிர்களை தாக்கி பெரும் சேதமடைந்துள்ளது.
இந்த பாதிப்புகளில் இருந்து எப்படி நாங்கள் மீள போகின்றோம் எனத்தெரியவில்லை.
மேலும் பயிர்களின் பாதிப்புநிலை குறித்து வேளாண்துறை அதிகாரிகளும்,மாவட்ட நிர்வாகமும் நேரடியாக பார்வையிட்டு அரசிடம் தெரிவித்து உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.