ETV Bharat / state

டெங்கு இல்லாத புதுக்கோட்டை... விழிப்புணர்வு முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Sep 27, 2019, 8:11 PM IST

புதுக்கோட்டை : டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பதற்கு இடமே கிடையாது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

துண்டுப்பிரசுரங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை, அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உணவகங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, உணவகங்களின் உரிமையாளருக்கு ”டெங்கு கொசுக்கள் ஒழிப்போம், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம்” குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி தொடங்கிவைத்தார்.

குளிர்சாதன பெட்டியை சோதனையிடும் மாவட்ட ஆட்சியர்
குளிர்சாதன பெட்டியை சோதனையிடும் மாவட்ட ஆட்சியர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை இயக்கமானது கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கப்பட்டு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தூய்மை பணி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக குழுக்கள் கண்காணிக்கப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள உணவகங்கள் , பொது இடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பதே கிடையாது. அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் மட்டும் இதுவரை, 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தார்

இதனையடுத்து, புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு உணவகத்தில் திடீரென ஆய்வை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், உணவகங்களில் சமைக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பார்வையிட்டார். மேலும், டெங்கு கொசுக்கள் உருவாகும் விதமாக ஏதேனும் தண்ணீர் தேங்கிய இடங்கள் வீடுகளில் இருந்தால் கண்டிப்பாக அபராதாங்கள் வசூலிக்கப்படும் என கூறினார்.

இதையும் படிங்க : வேலூரில் பரவும் டெங்கு காய்ச்சல் மறைக்கப்படுகிறதா?

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை, அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உணவகங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, உணவகங்களின் உரிமையாளருக்கு ”டெங்கு கொசுக்கள் ஒழிப்போம், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம்” குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி தொடங்கிவைத்தார்.

குளிர்சாதன பெட்டியை சோதனையிடும் மாவட்ட ஆட்சியர்
குளிர்சாதன பெட்டியை சோதனையிடும் மாவட்ட ஆட்சியர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை இயக்கமானது கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கப்பட்டு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தூய்மை பணி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக குழுக்கள் கண்காணிக்கப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள உணவகங்கள் , பொது இடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பதே கிடையாது. அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் மட்டும் இதுவரை, 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தார்

இதனையடுத்து, புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு உணவகத்தில் திடீரென ஆய்வை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், உணவகங்களில் சமைக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பார்வையிட்டார். மேலும், டெங்கு கொசுக்கள் உருவாகும் விதமாக ஏதேனும் தண்ணீர் தேங்கிய இடங்கள் வீடுகளில் இருந்தால் கண்டிப்பாக அபராதாங்கள் வசூலிக்கப்படும் என கூறினார்.

இதையும் படிங்க : வேலூரில் பரவும் டெங்கு காய்ச்சல் மறைக்கப்படுகிறதா?

Intro:Body:
புதுக்கோட்டைமாவட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் டெங்கு காய்ச்சலால் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பேட்டி.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்து நிர்வாகத்துறை அரசு மருத்துவக்கல்லூரி இணைந்து உணவங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது
இந்த முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி உணவகங்கள் உரிமையாளருக்கு டெங்கு கொசுக்கள் ஒழிப்போம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம் குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்கி முகாமை துவக்கி வைத்தார் இதில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மாணவர்கள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் டெங்கு கொசுவை பற்றிய விளக்கி கூறினார் மாணவர்களுக்கு செல் எவ்வாறு பரவியது குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி கூறுகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை இயக்கமானது கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கப்பட்டது தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தூய்மை பணி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் இதில் இணைக்கப்பட்டு இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக அந்த குழுக்கள் கண்காணிக்கப்பட்டு புதுக்கோட்டையில் உள்ள உணவகங்கள் மற்றும் பொது இடங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பதே கிடையாது புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பால் மட்டும் இதுவரை 60 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் புதுக்கோட்டையில் மருத்துவமனைகளில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார் இதனை அடுத்து புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு உணவகத்தில் திடீரென ஆய்வை மேற்கொண்ட உமா மகேஸ்வரி உணவகங்களில் சமைக்கப்படும் இடங்கள் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார் அதேபோல் வீடுகள் மற்றும் பொது அலுவலகங்கள் ஆகியவற்றில் டெங்கு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது டெங்கு கொசுக்களை உருவாக்கும் இடமாக வீடுகள் மற்றும் பொது இடங்களில் இருந்தால் கண்டிப்பாக அவதாரங்கள் வசூலிக்கப்படும் என கூறினார் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.