ETV Bharat / state

புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் போக்சோவில் கைது!

author img

By

Published : Feb 2, 2023, 1:53 PM IST

புதுக்கோட்டையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமியின் கர்பத்திற்கு காரணமாக இருந்த மூன்று பேரை கடந்த மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், இதில் சம்பந்தப்பட்ட கடலோர காவல் படை காவலர் ஒருவரை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ
போக்சோ

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், ஐந்து மாத கர்ப்பமாக இருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் அவரை கடந்த மாதம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். சிறுமி கற்பமாக இருந்ததால் இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட சிறுமியிடம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பாதிக்கப்பட்ட சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு காவலர் உள்ளிட்ட நான்கு பேர் பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், இதில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், மூன்று பேரை கடந்த மாதம் 8 ஆம் தேதி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய கடலோர காவல் படை காவலர் ஒருவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி 17 வயது சிறுவன் கடத்தல்.. போக்சோவில் 33 வயது பெண் கைது..

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், ஐந்து மாத கர்ப்பமாக இருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் அவரை கடந்த மாதம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். சிறுமி கற்பமாக இருந்ததால் இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட சிறுமியிடம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பாதிக்கப்பட்ட சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு காவலர் உள்ளிட்ட நான்கு பேர் பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், இதில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், மூன்று பேரை கடந்த மாதம் 8 ஆம் தேதி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய கடலோர காவல் படை காவலர் ஒருவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி 17 வயது சிறுவன் கடத்தல்.. போக்சோவில் 33 வயது பெண் கைது..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.