புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை அருகே பாலாஜி மோட்டார்ஸ் என்ற இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை உள்ளது. இந்த கடையின் வெளியே நேற்று (ஆகஸ்ட் 22) கடையின் உரிமையாளர் பழுது நீக்கம் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்திலேயே அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது. இது குறித்து கடையின் உரிமையாளர் சிசிடிவி காணொலி பதிவுகளை ஆராய்ந்துள்ளார். அதில் கடையின் வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் தன் சொந்த வாகனம் போல் சாவி போட்டு எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது.
பின்னர் கடையின் உரிமையாளர் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் சிசிடிவி காணொலி பதிவுகளை வைத்து இருசக்கர வாகனத்தை திருட்டிச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புட்செல் போலீஸ் எனக் கூறி பணம் திருட்டு - 3 பேர் கைது!