ETV Bharat / state

மாவட்ட சேர்மனுக்கு பேசுவதற்கு வகுப்பெடுத்த தொண்டர்கள் - வைரல் வீடியோ

author img

By

Published : Jan 11, 2020, 6:27 PM IST

Updated : Jan 11, 2020, 10:16 PM IST

புதுக்கோட்டை: மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக வெற்றிபெற்ற அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி, செய்தியாளர்களிடம் பேச முடியாமல் தவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், ஒன்பது இடங்களில் அதிமுகவும், நான்கு இடங்களில் திமுகவும் வெற்றிபெற்றன. அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின், புதுக்கோட்டை மாவட்ட ஒன்றிய அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஜெயலட்சுமி, செய்தியாளர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் மிகவும் திணறினார். உடனடியாக, அவர் அருகிலிருந்த கட்சி தொண்டர்கள், ’இப்படி பேசுங்கள்’, ’இதை பேசுங்கள்’ என அனைத்தையும் பொது இடத்தில் வைத்து வகுப்பெடுத்தனர்.

மாவட்ட ஊராட்சித் தலைவருக்குப் பேச வகுப்பெடுத்த தொண்டர்கள்

இதனால், பொதுவெளியில் பேச முடியாதவர் தலைவர் பதவிக்கு வந்து என்ன செய்யப்போகிறார் என்பது மக்களிடையே பேசுபொருளானது. மேலும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தாமதமாக வந்த தேர்தல் அலுவலர் - தள்ளிப்போன மறைமுகத் தேர்தல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், ஒன்பது இடங்களில் அதிமுகவும், நான்கு இடங்களில் திமுகவும் வெற்றிபெற்றன. அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின், புதுக்கோட்டை மாவட்ட ஒன்றிய அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஜெயலட்சுமி, செய்தியாளர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் மிகவும் திணறினார். உடனடியாக, அவர் அருகிலிருந்த கட்சி தொண்டர்கள், ’இப்படி பேசுங்கள்’, ’இதை பேசுங்கள்’ என அனைத்தையும் பொது இடத்தில் வைத்து வகுப்பெடுத்தனர்.

மாவட்ட ஊராட்சித் தலைவருக்குப் பேச வகுப்பெடுத்த தொண்டர்கள்

இதனால், பொதுவெளியில் பேச முடியாதவர் தலைவர் பதவிக்கு வந்து என்ன செய்யப்போகிறார் என்பது மக்களிடையே பேசுபொருளானது. மேலும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தாமதமாக வந்த தேர்தல் அலுவலர் - தள்ளிப்போன மறைமுகத் தேர்தல்!

Intro:Body:*பேசத் தெரியாமல் திணறிய தலைவருக்கு வகுப்பெடுத்த கட்சி தொண்டர்கள்*

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலும் மாவட்ட ஊராட்சி குழு தலைவருக்கான தேர்தலும் நடைபெற்றது. அதில் திமுக ஒன்பது இடங்களில் அதிமுக வும் நான்கு இடங்களில் திமுக வும் வெற்றி பெற்றனர் . புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற ஜெயலட்சுமி புதுக்கோட்டை மாவட்ட ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாமல் திணறினார். மேலும் பேசுவது போல கை நடுக்கத்துடனும்
இருந்தார் அப்போது அருகில் இருந்த அதிமுக தொண்டர்கள் இப்படி பேசுங்கள், இதை பேசுங்கள் என அனைத்தையும் பொது இடத்தில் வைத்து வகுப்பெடுத்தனர். பார்ப்பவர்களிடையே ஒரு வார்த்தை கூட பேசத் தெரியவில்லை பதவிக்கு வந்து இவர் என்ன செய்யப்போகிறார் என்ற நகைப்பை ஏற்படுத்தியது. Conclusion:
Last Updated : Jan 11, 2020, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.