புதுக்கோட்டையில் கோட்டைப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதில், மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ் ஆகிய நான்கு மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இரவு 11 மணியளவில் கோட்டைப்பட்டிணத்திலிருந்து சுமார் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கடல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அத்துமீறி நான்கு மீனவர்களையும் கைது செய்து அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். மேலும், நான்கு மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை செய்துவருகின்றனர்.