அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரிமூட்டம் போடும் தொழிலாளர்கள் பெரம்பலூர் அரனாரைப் பகுதியில் உள்ள ஏரியில் வேலி கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போடுகின்றனர்.
கரிமூட்டம் போடப்பட்டு கிடைக்கப்பட்ட கரி, வியாபாரிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு மூட்டை ரூபாய் 500 வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில், 'இந்த விலை தங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை. கரி மூட்டம் போடப்பட்ட மூட்டை 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்றால்தான் தங்களது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்றும் கரிமூட்டம் போடும் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆனால், தங்களிடம் வரும் வியாபாரிகள் இந்த மூட்டையை வெறும் 500 ரூபாய்க்கு வாங்கி, சில்லறை வியாபாரிகளிடம் ஆயிரத்திற்கு விற்கின்றனர்.
எங்களுக்கு இதைத் தவிர வேறு தொழில் தெரியாது. வயிற்றுப் பிழைப்பிற்காக ஊர் ஊராகச் சென்று கரிமூட்டம் போட்டு வருகிறோம்' என கண்ணீருடன் தெரிவித்தனர், கரி மூட்டம்போடும் தொழிலாளர்கள்.
மேலும், தங்களது பிள்ளைகளின் படிப்பு, மற்றும் இதரச் செலவிற்காக மொத்த வியாபாரியிடம் முன்பணம் பெறுவதால் அடுப்புக்கரி அதிக விலைக்கு விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போருக்கு ஆயத்தமாகும் ரஜினி? - மன்றச் செயலாளர்களுடன் இன்று சந்திப்பு