சமூக வலைதளங்களில் சாலை விதிகள் கடைப்பிடிப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை சினிமா பட பாணியில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் ஏற்படுத்திவருகின்றனர்.
![Banner for helping the accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-04-police-awarness-flex-script-image-7205953_26022020202617_2602f_1582728977_529.jpg)
இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்துகளின்போது உரிய நேரத்தில் உதவி செய்தவர்களுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் அவர்களின் புகைப்படம், பெயரோடு கூடிய பதாகைகளை நான்கு ரோடு பகுதி, ரோவர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
![Banner for helping the accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-04-police-awarness-flex-script-image-7205953_26022020202617_2602f_1582728977_847.jpg)
காவல் துறையினரின் இந்த செயல் பெரம்பலூர் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி கலவரம்: சாட்டையைச் சுழற்றிய நீதிபதி அதிரடி இடமாற்றம்