ETV Bharat / state

தேர்வு முடிந்தும் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பாத பள்ளி நிர்வாகம்!

author img

By

Published : Mar 19, 2019, 9:55 PM IST

Updated : Mar 19, 2019, 10:58 PM IST

பெரம்பலூர்: பிளஸ்டூ மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வு முடிந்த நிலையில், கல்வி கட்டணம் கட்டவில்லை எனக்கூறி, 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பாமல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் காத்திருப்பில் வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுமுடிந்தும் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பாத பள்ளி நிர்வாகம்!

பெரம்பலூர் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவ மாணவிகள் வீட்டிற்கு செல்ல ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் பள்ளி கல்வி கட்டணத்தை கட்டாத மாணவ மாணவிகளை வீட்டிற்கு அனுப்பாமல் பள்ளி கல்வி கட்டணம் கட்டி விட்டு வீட்டுக்கு செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கூறியதால் மாணவர்கள் அதிரச்சி அடைந்தனர்.

school-administration-refuses-send-students-to-home-
தேர்வுமுடிந்தும் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பாத பள்ளி நிர்வாகம்!

இதனால் 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியின் உள்ளேயே இருந்தனர். பிறகு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் வந்து மூன்று நாட்களுக்குள் பள்ளி கல்வி கட்டணம் கட்டுவதாக ஒப்புதல் கடிதம் கொடுத்த பின்னர் மாணவ மாணவிகள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.

பெரம்பலூர் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவ மாணவிகள் வீட்டிற்கு செல்ல ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் பள்ளி கல்வி கட்டணத்தை கட்டாத மாணவ மாணவிகளை வீட்டிற்கு அனுப்பாமல் பள்ளி கல்வி கட்டணம் கட்டி விட்டு வீட்டுக்கு செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கூறியதால் மாணவர்கள் அதிரச்சி அடைந்தனர்.

school-administration-refuses-send-students-to-home-
தேர்வுமுடிந்தும் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பாத பள்ளி நிர்வாகம்!

இதனால் 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியின் உள்ளேயே இருந்தனர். பிறகு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் வந்து மூன்று நாட்களுக்குள் பள்ளி கல்வி கட்டணம் கட்டுவதாக ஒப்புதல் கடிதம் கொடுத்த பின்னர் மாணவ மாணவிகள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.

19/03/19 பெரம்பலூரில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி யில் +2 மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வு முடிந்த நிலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை பள்ளி கல்வி கட்டணம் கட்டவில்லை என பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பாமல் காத்திருப்பில் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் சாலையில் ஸ்ரீ ராமகி ருஷ்ணா மேல்நிலைப் பள்ளி உள்ளது..இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் ...இந்நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவ மாணவிகள் வீட்டிற்கு செல்ல ஆர்வமாக இருந்தனர்... இந்நிலையில் பள்ளி கல்வி கட்டணம் கட்டாத மாணவ மாணவிகளை வீட்டிற்கு அனுப்பாமல் பள்ளி கல்வி கட்டணம் கட்டி விட்டு வீட்டுக்கு செல்லுமாறு கல்வி நிர்வாகம் கூறியது.. அதன்படி இன்று 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி கல்வி கட்டணம் கட்டாமல் பள்ளியின் உள்ளேயே இருந்தனர்.. பிறகு மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடன் மூன்று நாட்களுக்குள் பள்ளி கல்வி கட்டணம் கட்டுமாறு ஒப்புதல் கடிதம் பெற்ற பின் வீட்டிற்கு மாணவ மாணவிகளை அனுமதித்தனர்... இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. .
Last Updated : Mar 19, 2019, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.