ETV Bharat / state

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு: பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர்: வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

author img

By

Published : Jan 29, 2021, 5:49 PM IST

pmk party
pmk party

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வைத்தி தலைமையில், ஏராளமானோர் பெரம்பலூர் ரோவர் வளைவுப் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து பாலக்கரை பகுதியில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வைத்தி தலைமையில், ஏராளமானோர் பெரம்பலூர் ரோவர் வளைவுப் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து பாலக்கரை பகுதியில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.