பெரம்பலூர் அருகே கல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் ஜெய பாக்கியம் (வயது 13). இவர் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அதே பகுதியில் உள்ள சுப்ரமணியன் என்பவருக்குச் சொந்தமான வயலில் துணி துவைக்க சென்றபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த அவர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுமியை சடலமாக மீட்டனர்.
தகவலறிந்து வந்த பெரம்பலூர் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு - 10 மணி நேர போராட்டத்திற்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்