ETV Bharat / state

பராமரிக்கப்படாத அணைக்கட்டு; பரிதவிக்கும் விவசாயிகள்!

author img

By

Published : Nov 22, 2019, 8:14 PM IST

பெரம்பலூர்: மூன்று ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் மருதையாறு துறைமங்கலம் அணைக்கட்டை சீரமைக்கக் கோரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Peoples request to renovate the Maruthayaru dam

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மருதையாறு துறைமங்கலம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டானது கீழ கணவாய், செல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உற்பத்தியாகும் மருதையாறு பெரம்பலூர் மாவட்டம் வழியாகச் சென்று அரியலூர் மாவட்டம் கொள்ளிடத்தில் வீணாக கலப்பதை தடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. கடந்த 1983ஆம் ஆண்டு பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூரில் அப்போதைய வருவாய் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராஜா முகமது ஆகியோரால் இந்த அணைக்ககான அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பராமரிக்கப்படாத மருதையாறு அணைக்கட்டு

மழையால் இந்த அணைக்கட்டில் தேங்கும் தண்ணீரை நம்பியை அப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் இருக்கிறது. இந்த அணைக்கட்டு மூலம் விளாமுத்தூர் நொச்சியம் செல்லியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மருதையாறு துறைமங்கலம் அணைக்கட்டு பராமரிக்கப்படாததால் கால்வாய்கள் முட்புதர்களால் சூழ்ந்து காணப்படுகின்றன.

மேலும், மணல் திட்டுகள் உருவாகி மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் வீணாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் சூழல் நிலவி வருகிறது. இதற்காக சீரமைப்பு பணியை மேற்கொள்ள கோரி அப்பகுதியினர் பொதுப்பணித்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்கை காட்டி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கைமாறிய மரக்கன்றுகள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மருதையாறு துறைமங்கலம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டானது கீழ கணவாய், செல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உற்பத்தியாகும் மருதையாறு பெரம்பலூர் மாவட்டம் வழியாகச் சென்று அரியலூர் மாவட்டம் கொள்ளிடத்தில் வீணாக கலப்பதை தடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. கடந்த 1983ஆம் ஆண்டு பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூரில் அப்போதைய வருவாய் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராஜா முகமது ஆகியோரால் இந்த அணைக்ககான அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பராமரிக்கப்படாத மருதையாறு அணைக்கட்டு

மழையால் இந்த அணைக்கட்டில் தேங்கும் தண்ணீரை நம்பியை அப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் இருக்கிறது. இந்த அணைக்கட்டு மூலம் விளாமுத்தூர் நொச்சியம் செல்லியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மருதையாறு துறைமங்கலம் அணைக்கட்டு பராமரிக்கப்படாததால் கால்வாய்கள் முட்புதர்களால் சூழ்ந்து காணப்படுகின்றன.

மேலும், மணல் திட்டுகள் உருவாகி மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் வீணாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் சூழல் நிலவி வருகிறது. இதற்காக சீரமைப்பு பணியை மேற்கொள்ள கோரி அப்பகுதியினர் பொதுப்பணித்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்கை காட்டி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கைமாறிய மரக்கன்றுகள்!

Intro:பெரம்பலூர் அருகே மூன்று ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் மருதையாறு துறைமங்கலம் அணைக்கட்டு சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை


Body:பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும் வானம் பார்த்த பூமியான பெரம்பலூர் மாவட்டம் மழையை நம்பியே பெருவாரியான மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன பருத்தி மக்காச்சோளம் சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் இந்நிலையில் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விசுவக்குடி கொட்டகைகளில் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது இந்நிலையில் கீழ கணவாய் செல்லியம்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து உற்பத்தியாகும் மருதையாறு பெரம்பலூர் மாவட்டம் வழியாக அரியலூர் மாவட்டம் கொள்ளிடத்தில் வீணாக கலக்கிறது இந்த தண்ணீரை பெரம்பலூர் பகுதி விவசாயிகள் பயன்படுத்த வசதியாக கடந்த 1983 ஆம் ஆண்டு பெரம்பலூர் அருகே உள்ள விழா முற்பகுதியில் அப்போதைய தலைமை வருவாய் அமைச்சர் எஸ் டி சோமசுந்தரம் மற்றும் அப்போதைய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராஜா முகமது அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டது மருதையாறு துறைமங்கலம் அணைக்கட்டு இந்த அணைக்கட்டு மூலம் துரைமங்கலம் ஏரியில் உள்ள 319.60 ஏக்கர் பாசன வசதி பெறும் மேலும் விழா முத்தூர் நொச்சியம் செல்லியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இந்த அணைக்கட்டு மூலம் பாசன வசதி பெறப்பட்டன சுற்றியுள்ள கிராமங்களில் நீர்மட்டம் உயர்வதற்கு இந்த அணைக்கட்டு பெரிதும் உதவியாக இருந்தது இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மருதையாறு துறைமங்கலம் அணைக்கட்டு பராமரிக்கப்படாததால் கால்வாய்களில் உள்ள மதங்கள் மற்றும் மணல் திட்டுகளில் நீர் தேங்கி நிற்கின்றது மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் வீணாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது மேலும் விவசாயிகள் இந்த அணைக்கட்டு பகுதியை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை அளித்தும் நிறைவேற்றப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்


Conclusion:ஆகவே விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய இந்த அணைக்கட்டு பகுதியை சீரமைத்து மழைக்காலங்களில் தண்ணீர் சேமிப்பு விவசாய பயனுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.