ETV Bharat / state

பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டிய கழிப்பறைக்கு பணம் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை - Perambalur district news

பெரம்பலூர்: பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டி 4 ஆண்டுகளாகியும் மாவட்ட நிர்வாகம் பணம் தரவில்லை எனக்கூறி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
author img

By

Published : Oct 2, 2020, 4:04 PM IST

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி, கோனேரிப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று (அக்.2) முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள், "சென்ற 2015-16ஆம் ஆண்டில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டி 4 ஆண்டுகளாகியும் மாவட்ட நிர்வாகம் பணம் தரவில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றனர்.

மேலும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டியதற்கான பணம் ரூ. 12 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதையும் படிங்க: பயிர் காப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்!

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி, கோனேரிப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று (அக்.2) முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள், "சென்ற 2015-16ஆம் ஆண்டில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டி 4 ஆண்டுகளாகியும் மாவட்ட நிர்வாகம் பணம் தரவில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றனர்.

மேலும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டியதற்கான பணம் ரூ. 12 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதையும் படிங்க: பயிர் காப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.