ETV Bharat / state

கஞ்சா விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது!

author img

By

Published : Dec 19, 2019, 10:21 PM IST

பெரம்பலூர்: கஞ்சா விற்பனை செய்துவந்த கணவன், மனைவி உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கஞ்சா விற்ற தம்பதி உட்பட 4 பேர் கைது
கஞ்சா கைது

பெரம்பலூர் மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கஞ்சா செடி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த வெங்கடேசன், பெரம்பலூர் சங்குப்பேட்டையைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 143 கிராம் எடையுள்ள 33 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைப்போல் பெரம்பலூர் நகர பகுதியில் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவலர்கள் ரோந்துப் பணியில் இருந்தபோது ரோவர் வளைவு அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த பெரம்பலூரைச் சேர்ந்த செல்வக்குமார், அவரது மனைவி அஞ்சலி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அதையடுத்து அவர்களிடமிருந்து ரூ. 3,500 மதிப்புள்ள கஞ்சா, இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இதையும் படியுங்க: சென்னை முழுவதும் கஞ்சா விநியோகிக்க ஏற்பாடு - வீட்டில் பதுக்கிய 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்!

பெரம்பலூர் மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கஞ்சா செடி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த வெங்கடேசன், பெரம்பலூர் சங்குப்பேட்டையைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 143 கிராம் எடையுள்ள 33 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைப்போல் பெரம்பலூர் நகர பகுதியில் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவலர்கள் ரோந்துப் பணியில் இருந்தபோது ரோவர் வளைவு அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த பெரம்பலூரைச் சேர்ந்த செல்வக்குமார், அவரது மனைவி அஞ்சலி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அதையடுத்து அவர்களிடமிருந்து ரூ. 3,500 மதிப்புள்ள கஞ்சா, இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இதையும் படியுங்க: சென்னை முழுவதும் கஞ்சா விநியோகிக்க ஏற்பாடு - வீட்டில் பதுக்கிய 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்!

Intro:கஞ்சா விற்பனை செய்த தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்


Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கோபாலபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு உள்ள தனியார் விடுதியில் கஞ்சா செடி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் பெரம்பலூர் சங்கு பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரன் இரண்டு பேரையும் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 143 கிராம் எடையுள்ள 33 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்
இதைப்போல் பெரம்பலூர் நகர நகர பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது ரோவர் வளைவு அருகே மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் 13வது வார்டு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகிய 2 பேரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து ரூபாய் 3500 மதிப்புள்ள கஞ்சாவை மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்


Conclusion:மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.