ETV Bharat / state

'எங்கள சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்க' - வெளிமாநிலத் தொழிலாளர்கள் - migrant workers in tamilnadu

பெரம்பலூர்: தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி 50க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

north indian
north indian
author img

By

Published : May 7, 2020, 10:21 AM IST

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், சில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடைபயணமாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர்.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ராஜஸ்தான், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வீடுகளில் டைல்ஸ் ஒட்டுவது, கிரானைட் பதிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தனர். கரோனா பாதிப்பால் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலையின்றி தவிக்கும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடிவெடுத்தனர்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள்

இதனையடுத்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: முன்னாள் மத்திய இணை அமைச்சர் எழில்மலை உயிரிழப்பு

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், சில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடைபயணமாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர்.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ராஜஸ்தான், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வீடுகளில் டைல்ஸ் ஒட்டுவது, கிரானைட் பதிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தனர். கரோனா பாதிப்பால் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலையின்றி தவிக்கும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடிவெடுத்தனர்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள்

இதனையடுத்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: முன்னாள் மத்திய இணை அமைச்சர் எழில்மலை உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.