ETV Bharat / state

போலீஸ் மீது நடவடிக்கை வேண்டும்: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

பெரம்பலூர்: அப்பாவி பொதுமக்களை மிரட்டி கைது செய்யும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு லாடபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Oct 30, 2019, 9:54 AM IST

ladapuram people protes

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்துக்கும் சத்தியகீர்த்தி என்பவருக்கும் தீபாவளியன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது நண்பர்களான கண்ணதாசன், சதீஷ் செல்வம், செந்தில் குமார் ஆகியோரை அழைத்து வந்த சத்தியகீர்த்தி, அரவிந்த், குமார், ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் இரும்பு கம்பிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இதில் பலத்த காயமடைந்த மூவரும் பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் அரவிந்த் மற்றும் குமார் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, பெரம்பலூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசன், சதீஷ் செல்வம், செந்தில் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

தலமைறைவாகவுள்ள சத்தியமூர்த்தியை தேடிவந்த நிலையில், சத்தியகீர்த்தியின் உறவினரான முருகேசன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். காவல் துறை செய்து விடுவதாக மிரட்டியதால் தான் முருகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று கூறி முருகேசனின் உறவினர்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த இரு தரப்பு மோதலுக்கு காரணமானவர்கள் என்று காவல்துறை கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அப்பாவி பொதுமக்களை அடிக்கடி மிரட்டி கைது செய்யும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த மழை!

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்துக்கும் சத்தியகீர்த்தி என்பவருக்கும் தீபாவளியன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது நண்பர்களான கண்ணதாசன், சதீஷ் செல்வம், செந்தில் குமார் ஆகியோரை அழைத்து வந்த சத்தியகீர்த்தி, அரவிந்த், குமார், ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் இரும்பு கம்பிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இதில் பலத்த காயமடைந்த மூவரும் பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் அரவிந்த் மற்றும் குமார் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, பெரம்பலூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசன், சதீஷ் செல்வம், செந்தில் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

தலமைறைவாகவுள்ள சத்தியமூர்த்தியை தேடிவந்த நிலையில், சத்தியகீர்த்தியின் உறவினரான முருகேசன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். காவல் துறை செய்து விடுவதாக மிரட்டியதால் தான் முருகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று கூறி முருகேசனின் உறவினர்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த இரு தரப்பு மோதலுக்கு காரணமானவர்கள் என்று காவல்துறை கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அப்பாவி பொதுமக்களை அடிக்கடி மிரட்டி கைது செய்யும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த மழை!

Intro:பெரம்பலூர் அருகே பொதுமக்கள் மிரட்டி கைது செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்


Body:கலவரத்திற்கு காரணமானவர்கள் என்னும் சந்தேகத்தில் அப்பாவி பொதுமக்களை மிரட்டி கைது செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் தீபாவளி தினத்தன்று இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது இந்த மாதிரி ஒரு தரப்பை சேர்ந்த அரவிந்த் குமார் ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சத்தியகீர்த்தி உள்ளிட்ட சிலர் இரும்பு கம்பிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் பலத்த காயமடைந்த மூவரும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் அதில் அரவிந்த் மற்றும் குமார் இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அனுப்பப்பட்டனர் சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு தரப்பை சேர்ந்த கண்ணதாசன் சதீஷ் செல்வம் செந்தில்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள சத்தியகீர்த்தி உள்ளிட்டோரை தேடிவந்தனர் இந்நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த முருகேசன் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் போலீசார் கைது செய்து விடுவதாக மிரட்டியதால் தான் முருகேசன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறி ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்


Conclusion:மேலும் கலவரத்திற்கு காரணமானவர்கள் எனக்கூறி கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் அப்பாவி பொதுமக்களை அடிக்கடி மிரட்டும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் லாடபுரம் கிராமத்தில் அடிக்கடி நிகழும் சாதி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர் இதற்கிடையே முற்றுகைப் போராட்டத்தில் பெண் ஒருவர் மயக்கமடைந்தார் சிகிச்சைக்காக அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.