ETV Bharat / state

அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு: காசோலை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்

பெரம்பலூர்: அம்மா உணவகங்களில் பொது மக்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக ரூபாய் நான்கு லட்சத்திற்கான காசோலையை குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் வழங்கினார்.

author img

By

Published : Jun 5, 2020, 4:09 PM IST

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம், அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகம் ஆகிய இரண்டு உணவகங்களிலும் ஜூன் 30 வரை பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகின்றன.

இதற்காக பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் ரூபாய் நான்கு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் குமரி மன்னனிடம் வழங்கினார்.

மேலும், கரோனா வைரஸ் ஊரடங்கு அறிவித்ததில் இருந்து பொதுமக்கள் இலவசமாக உணவு உண்பதற்காக இதுவரை ரூபாய் ஆறு லட்சம் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம், அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகம் ஆகிய இரண்டு உணவகங்களிலும் ஜூன் 30 வரை பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகின்றன.

இதற்காக பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் ரூபாய் நான்கு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் குமரி மன்னனிடம் வழங்கினார்.

மேலும், கரோனா வைரஸ் ஊரடங்கு அறிவித்ததில் இருந்து பொதுமக்கள் இலவசமாக உணவு உண்பதற்காக இதுவரை ரூபாய் ஆறு லட்சம் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.