பெரம்பலூர் மாவட்டம் வல்லாபுரம் பகுதியில் உள்ள ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், இந்திய அரசின் நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பாக நீர் மேலாண்மை நெறிமுறைகள் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கம் அம்மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். திடீரென விவசாயிகள் எழுந்து மாவட்ட ஆட்சியரின் அருகில் சென்று, “அரியலூர் மாவட்டத்தில் பனை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து, விவசாயிகள் ஊக்குவிக்கப் படுகிறார்கள், நீங்கள் பனை விவசாயத்திற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கவில்லை?” உள்ளிட்ட சராமாரி கேள்விகளை ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் மெத்தனமாக பதில் கூறிவிட்டு சட்டென்று கிளம்பி விட்டார். இந்நிகழ்வால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.