ETV Bharat / state

கோயில் முன்பு சடலமாகக் கிடந்த ஆண்: போலீசார் விசாரணை

author img

By

Published : Jun 12, 2020, 2:44 PM IST

பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கோயில் வாசல் முன்பு கிடந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Dead body
Dead body

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அய்யனார் கோயிலின் வாசல் முன்பு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர், பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணுச்சாமி (வயது 40) என்பது தெரியவந்துள்ளது.

இறந்த நபருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஜெயஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், பெரம்பலூர் காவல் துறையினர் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்தவரின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அய்யனார் கோயிலின் வாசல் முன்பு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர், பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணுச்சாமி (வயது 40) என்பது தெரியவந்துள்ளது.

இறந்த நபருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஜெயஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், பெரம்பலூர் காவல் துறையினர் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்தவரின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.