பெரம்பலூர் நகர்ப்புற பகுதிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியில் இயங்கி வருகிறது கார்ப்பரேசன் வங்கி ஏடிஎம். இந்த ஏடிஎம்மில் இன்று மாலை ஒருவர் தனது ஏடிஎம் கார்டை செலுத்தி பணம் எடுக்க முயன்றார்.
அந்த ஏடிஎமில் இருந்து பணம் வர தாமதமானதால் அந்த நபர் ஏடிஎம்மை விட்டு சென்றுவிட்டார். பின்னால் வந்த மற்றொரு நபர் பணம் எடுக்க வந்தபோது ஏற்கனவே ஏடிஎம் கார்டை செலுத்தியவரின் பணம் வந்ததை லாவகமாக எடுத்துவிட்டார். இதனிடையே வங்கி ஏடிஎம் சிசிடிவி காட்சிகளை வைத்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.